கோவை, மார்ச் 27- கலைஞரின் வரும்முன் காப்போம் மருத்துவ முகாமை கோவை மணியகாரன்பாளையத்தில் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஞாயிறன்று துவக்கி வைத்தார். கோவை மணியகாரன்பாளையம் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை சார்பில், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில், பெண்கள், குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ மும், எலும்பு முறிவு மற்றும் புற்றுநோய் மருத்துவ ஆலோ சனை, கண் மருத்துவம், பொது மருத்துவங்களும் இடம் பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச் சத்து அடங்கிய பொருட்களை மேயர் கல்பனா வழங்கி னார். மேலும், 75 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளை காப்பு நிகழ்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, நகர்நல அலுவலர் சதீஸ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.