திருப்பூர், மே 2 - திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உழைப்பாளர் திருநாள் மே தின விழா வெகு எழுச்சியோடு கொண் டாடப்பட்டது. தாராபுரத்தில் மே தினத்தையொட்டி பல்வேறு இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது. மாலை செங்கொடி பேரணி சிபிஎம் தாலுகா செயலாளர் என். கனகராஜ் தலைமையில் பறை இசை முழங்க, எழுச்சிமிகு முழக்கங்களுடன் நடைபெற்றது. மழைத்துளி விழ ஆரம் பித்த நிலையிலும் கட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கி பழைய காய்கறி மார்கெட், பூக்கடை கார்னர் வழியாக அண்ணா சிலை முன்பு அமைக்கப்பட்டி ருந்த பொதுக்கூட்ட மேடையை பேரணி அடைந்தது. கனத்த மழை காரணமாக பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. உடுமலையில் சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் சார்பில் ராஜேந்திரா ரோடு பூங்கா பகுதியில் இருந்து ஆயி ரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்ட மே தின பேரணி தொடங் கியது. நகரின் முக்கிய வீதிகளின் வழி யாக சென்று பேருந்து நிலையம் அரு கில் வெங்கிட கிருஷ்ணா ரோட்டில் நிறைவடைந்து, பொதுக்கூட்டம் நடை பெற்றது. சிஐடியு மாவட்ட துணை செயலாளர் ஜெகதீசன் தலைமையில் பேரணி நடை பெற்றது. பொதுக்கூட்டத்த்திற்கு ஏஐடியுசி மாநிலக்குழு உறுப்பினர் செளந்தர ராஜன் தலைமை ஏற்றார். சிஐ டியு சார்பில் கே.காமராஜ், ஜெகதீசன், விஸ்வநாதன், ஏஐடியுசி சார்பில் ரகு பதி, சி.சுப்பிரமணியம் ஆகியோர் உரை யாற்றினர். இரு சங்கங்களின் முக்கிய நிர்வாகி கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிறைவாக ரணதேவ் நன்றி கூறினார். மடத்துகுளம் நால்ரோடு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் மேதின பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. மடத்துக்குளம் கங்கா திருமண மண்டப பகுதியில் இருந்து பேரணியை ஒய்வூ தியர் சங்கத்தின் வட்டார தலைவர் கருணாநிதி துவக்கி வைத்தார். பேரணி முடிவில் நால்ரோடு பகுதியில் சிஐடியு கட்டிட சங்கத்தின் செயலாளர் பன்னீர் செல்வம் தலைமையில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில துணைத லைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் சிறப்பு ரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஆர்.வி.வடிவேல், விவசாய சங்க நிர்வா கிகள் எம்.எம்.வீரப்பன், ஈஸ்வரன் உட் பட திரளனோர் கலந்து கொண்டனர். அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிக ளில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் சிஐ டியு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தின விழா நடை பெற்றது. அவிநாசி ஒன்றியம் மற்றும் திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உள் ளிட்ட பகுதிகளில் இந்த கொடியேற்று விழா நடைபெற்றது. இதேபோல, சிஐ டியு உள்ளாட்சித் துறைஊழியர் சங்கத் தின் சார்பிலும் கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்வுகளில் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், பழனிச்சாமி, சிஐடியு விசைத்தறி சம்மேளனம் மாநில தலைவர் முத்து சாமி உட்பட பலர் கலந்து கொண் டனர்.