districts

img

மாதர் சங்க சூலூர் தாலுகா மாநாடு

கோவை, ஜூன் 9– அதிகரிக்கும் பெண்கள் மீதான வன்முறையை தடுக்க, கண்காணிப்பை தீவிரப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சூலூர் தாலுகா மாநாடு இருகூர் சமுதாயக் கூடத்தில் புதனன்று நடை பெற்றது. கண்மணி தலைமையில் நடைபெற்ற இம்மா நாட்டை மாதர் சங்க மாவட்ட பொருளாளர் ஜோதிமணி துவக்கி வைத்து உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சி யின் சூலூர் தாலுகா செயலாளர் சந்திரன், வாலிபர் சங்க  முன்னாள் மாவட்ட தலைவர் ரவீந்திரன் ஆகியோர் வாழ்த் துரையாற்றினர். இம்மாநாட்டில், சூலூரில் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி துவங்க வேண்டும். மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் சம்ப ளம் முறையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத் தின் சூலூர் தாலுகா தலைவராக பரிமளம், செயலாளராக லிதாமணி, பொருளாராக மகேஷ்வரி உள்ளிட்ட நிர்வாகி கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா உரையாற்றி னார். மாநாட்டில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.