districts

img

திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலம்

சேலம், பிப்.27- சேலம் மாநகரம், முன்னாங்காடு மாமரத்து குட்டை பகுதியில் பெண்க ளுக்கான கழிப்பறை வசதி ஏற்படுத் தித்தர வேண்டும் என மாதர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சேலம் மாநகரம் 58 ஆவது வார்டுக்கு உட்பட்ட முன்னாங்காடு  மாமரத்து குட்டை பகுதியில் பல  ஆண்டு காலமாக கழிப்பறை  வசதி இல்லாமல் அப்பகுதி பெண் கள் அவதி அடைந்து வருகின் றனர். இதனால், பெண்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கும் அவல  நிலை நீடித்து வந்தது. கழிப்பறை  வசதி வேண்டி பலமுறை மாநக ராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு  அளித்தும், இதுவரை எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலாவது பெண்களுக்கு கழிப்பறை கட்டித்  தாருங்கள் என முயற்சி செய்தும்  எந்தவொரு பலனும் அளிக்க வில்லை. இந்நிலையில், மாமரத்து  குட்டை பகுதியில் இயற்கை உபா தைகளை கழிக்க இருந்த இடத்தை யும், தற்போது மாநகராட்சி நிர்வா கம் கம்பி வேலி அமைத்து மூடியது.  இதனால், கடும் சிரமத்திற்கு உள்ளா கும் பெண்கள், மாநகராட்சி அதிகாரி களிடம் கம்பி வேலியை அகற்று மாறு கூறியுள்ளனர். ஆனால், தற் போது ஒன்றும் செய்ய இயலாது நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தான் கழிப்பறை கட்ட முயற்சி எடுக் கப்படும் என மாநகராட்சி அதிகாரி கள் அலட்சியமாக பேசியதாக கூறப் படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப் பகுதி பொதுமக்கள், கம்பி வேலை அமைக்கப்பட்ட ஒரு சில பகுதியை பிடுங்கி எடுத்தனர். மேலும், மாநக ராட்சி நிர்வாகம் கழிப்பறை கட்டி தரும் வரை, இந்த இடத்தை பெண் கள் பயன்படுத்துவார்கள் என தெரி வித்தனர். போராட்டத்தில் இந்திய  ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச்  செயலாளர் பெரியசாமி, தலைவர் ஜெகன்நாதன், மாதர் சங்க துணைச் செயலாளர் தேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.