districts

img

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அவிநாசி, மார்ச் 10 - அவிநாசி அருகே பெரியாயிபாளையத்தில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் செல்வி, திரு முருகன்பூண்டி முன்னாள் கவுன்சிலர் சிவகாமி உட்பட பலர்  கலந்து கொண்டனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், கிளைச்  செயலாளர் பொன்னுச்சாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி உரையாற்றினர்.