தருமபுரி, டிச.7- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கொடி யேற்று விழா தருமபுரி ஒன்றியம், செம்மாண்டகுப்பம் கிராமத்தில் புதனன்று நடைபெற்றது. கொடியேற்று விழாவுக்கு மாவட்டக்குழு உறுப்பினர் மாது தலைமை வகித்தார். சங்க கொடியை மாநில பொதுச் செயலாளர் ஏ.ராதிகா ஏற்றி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் ஆர்.மல்லிகா, மாவட்ட தலைவர் ஏ.ஜெயா, பொருளாளர் வளர்மதி, ஒன்றிய செயலாளர் எம்.மீனாட்சி, ஒன்றிய தலைவர் தமிழ்மணி, நகர செயலாளர் நிர்மலா ராணி, மாவட்ட நிர்வாகிகள் கே.பூபதி, கே.சுசிலா ரங்கநாயகி, மாலா ஆகியோர் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி ஒன்றிய செய லாளர் என்.கந்தசாமி வாழ்த்தி பேசினர்.