districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மாதர் சங்க போதை எதிர்ப்பு மாநாடு தீர்மானம்

திருப்பூர், செப்.26 – நம் நாட்டில் அதிகாரத்தில் இருப்பவர்கள் வேலையில்லா  திண்டாட்டத்தை உருவாக்கிவிட்டு இளைஞர்களை போதை யில் ஆழ்த்தி வைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் போதை எதிர்ப்பு மாநாடு, போதைப் பொருட்களை விநியோகம் செய் வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியு றுத்தி உள்ளது. இம்மாநாட்டில், போதை கலாச்சாரம் சமூக ஒற்றுமை அமைதியை சீர்குலைப்பதுடன், இளைஞர்களை, மாணவர் களை திசை திருப்பி அவர்களின் அறிவாற்றல், உடல் ஆரோக் கியத்தை பாதிக்கிறது. வீட்டில் ஆண்கள் போதைக்கு அடிமை யாவதால் பெண்கள் மீது வன்முறை அதிகமாகி உள்ளது.  பொதுவெளியில் பெண்கள் மீதான குற்ற செயல்களும் அதிக ரித்துள்ளன. அதிக அளவில் போதைப் பொருட்கள் துறைமுகங்களின்  மூலம் கடத்தப்படுகிறது. இன்றைக்கு போதை பொருட் களின் தலைநகரமாக குஜராத் மாநிலத்தின் அதானி கையி லுள்ள துறைமுகம் மாறியுள்ளது. துறைமுகங்கள் போதைப் பொருட்களை கடத்துவதற்கான மாபியா கும்பல்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் குஜராத் முத்ரா துறைமுகத்தின் மூலம் இரண்டரை  லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள்  பிடிபட்டுள்ளது. ஆனால் இதுவரை ஒரு வழக்குக்கூட பதியப் படவில்லை. நாடு முழுவதும் தனியார்மயமாக்கப்பட்டுள்ள துறைமுகங்கள், அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக் கப்பட்டு மாபியாக்களின் கைகளில் உள்ளன. தமிழகத்தில் இலக்கு வைத்து மது விற்பனை அதிகரிக் கப்படுகிறது. இதை அரசு கைவிட வேண்டும். டாஸ்மாக் கடை களை படிப்படியாக மூட வேண்டும். நாடு முழுவதும் போதை  வஸ்துக்களை விநியோகிப்பவர்களை கடும் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். போதை விழிப்புணர்வு மையங்களை  அதிகமாக்க வேண்டும் என தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் பறிப்பு - சிஐடியு கண்டனம் 

உதகை, செப்.26- சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பறித்த உதகை நகராட்சி நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் சிஐடியு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சிஐடியு நீலகிரி மாவட்டத் தலைவர் சங்கர லிங்கம், செயலாளர் வினோத் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, உதகையில் வியா பாரிகள் குழுவின் அனுமதியில்லாமலேயே காவல்துறை யினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர்  சட்ட விரோதமாகக்  கடைகளை அகற்றுகின்றனர். இதனால், 300க்கும் மேற்பட்ட  வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசின் சட் டத்தின்படி, வியாபாரிகளை அப்புறப்படுத்தும் உரிமை நிர்வாகிகளுக்கு இல்லை. தற்போது காவல்துறை உதவி யுடன் உதகை நகராட்சி நிர்வாகம் அகற்றி வருகிறது. கடை களை அகற்றுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். எனவே, இதுவரை அடையாள அட்டை முறைப்படி வழங் காதவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். அகற்றப்பட்ட சாலையோரக் கடைகளுக்குப் பதிலாகப் புதி தாக கடைகள் அமைக்க குறைந்த வாடகைகளில் இடங்கள்  அளிக்க அரசு உடனடியாக வழிவகை செய்ய வேண்டும்.  சாலையோர சிறு வியாபாரி குழுவினர் மற்றும் தொழிற் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருக்கு பேருந்து சேவை நிறுத்தம்

கோவை, செப்.26- கர்நாடக மாநிலத்திற்கு கோவையில் இருந்து பேருந்து  சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.  காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு  உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு கன்னட  அமைப்புகள், அங்குள்ள விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் முழு அடைப்பு  போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு பாஜக, மத சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட  கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக  தமிழகத்தில் இருந்து பெங்களூரு மற்றும் மைசூர் உள் ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துக்கள் சேவை முழுவது மாக நிறுத்தப்பட்டுள்ளது.  கோவையிலிருந்து பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினசரி 30 பேருந்துக் கள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துக்களில் அதிகாலை நேரத்தில் 3 பேருந்துக்கள் மட்டுமே பெங்களூருக்கு புறப் பட்டு சென்றது. மற்ற பேருந்துகளின் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.  இதுபோல தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கோவையில் இருந்து கர்நாடக மாநிலத் திற்கு காலை நேரத்தில் 4 பேருந்துகளும், மாலையில் 4  பேருந்துகளும் இயக்கப்படுகிறது.  இந்நிலையில், போராட்டம் காரணமாக காலையில் 2  பேருந்துகளும், மாலையில் 2 பேருந்துகளும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. மற்ற பேருந்துகளின் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப்.26 – டாஸ்மாக் குடோன் களில் வேலை செய்யக் கூடிய சுமைப்பணித் தொழி லாளர்களுக்கு இறக்குக் கூலி உயர்வு மற்றும் தீபாவளி போனஸ் வழங்கக் கோரி சிஐடியு சுமைப்பணித் தொழிலாளர் சங்கத்தினர் திருப்பூர், காங்கேயத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருப்பூர், அங்கேரி பாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் குடோன்  வளாகத்தில் செவ்வாயன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்துக்கு கிளை நிர்வாகி பிரபாகரன் தலைமை வகித் தார். இதில் மதுபான உற் பத்தி ஆலை நிர்வாகங்கள் இறக்குக்கூலி உயர்வு வழங்க வேண்டும், டாஸ் மாக் நிர்வாகம் தலையிட்டு கூலி உயர்வு கிடைக்கச் செய்ய வேண்டும், சட்டப்படி இந்த தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க  வேண்டும் என வலியு றுத்தி முழக்கங்கள் எழுப்பப் பட்டன.

சிபிஎம் போராட்ட அறிவிப்பு சாலையை சீரமைப்பதாக உறுதி

சேலம், செப்.26- மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, சிதலமடைந்த சாலையை சீரமைக்க உறுதியளிக்கப்பட்டது. சேலம் மாவட்டம், ஏற்காடு லேடீஸ் சீட் செல்லும் சாலையில் சேறும், சகதியுமாக உள்ள சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாற்று நடும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதையடுத்து அந்த இடத்தின் உரிமையாளர், ஜேசிபி வைத்து சுத்தம் செய்து கொடுப்பதாகவும், சாலைக்கு அந்த இடத்திலிருந்து மண் வராதபடி ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார். இதையேற்று நாற்று நடும் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஏற்காடு தாலுகாக் செயலாளர் நேரு, தாலுகாக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கால்நடை ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், செப்.26- காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கால்நடை ஆய்வாளர் பயிற்சியை போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும். தேர்தல் வாக்கு றுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நீண்டநாள் கோரிக் கையான கால்நடை முதுநிலை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு, அடுத்த கட்ட  பதவி உயர்வு வழங்க உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் சார்பில் சேலம் ஆட்சியர்  அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். இதில் மாநிலப் பொரு ளாளர் ஜி.கதிரவன், தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், ஓய்வுப் பெற்ற  கால்நடை ஆய்வாளர் சங்க மாநில  இணைச்செயலாளர் தேவராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கால் நடை ஆய்வாளர்கள் சங்க மாவட்ட இணைச்  செயலாளர் கே.சக்திவேல் முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.நசிர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.  அரசு ஊழியர் சங்க மாநில துணைப்பொதுச் செயலாளர் சீனிவாசன், மாவட்டச் செய லாளர் ச.விஜய மனோகரன், ஓய்வுபெற்ற கால்நடை ஆய்வாளர் சங்க மாநிலத் தலைவர்  கே.ஆர்.சின்னசாமி, மாவட்டத் தலைவர்  முருகன் உட்பட திரளானோர் ஆர்ப்பாட்டத் தில் கலந்து கொண்டனர்.

உரிமைத் தொகையை அபராதமாக பிடித்துக் கொண்ட தனியார் வங்கி

திருப்பூர், செப். 26 – திருப்பூர் வஞ்சிபாளையம் முருகம்பாளையம் அருகே எஸ்.ஆர்.நகரை சேர்ந்தவர் மனோகரன். தனியார் பள்ளி  வாகன ஓட்டுநர். இவரது மனைவி வசந்தி (57). தம்பதி யருக்கு இரு மகள்கள். மகள்களுக்கு திருமணமான நிலை யில் வசந்தி கூலி வேலைக்கு சென்று வந்தார். தமிழ்நாடு  அரசு அறிவித்த மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தி ருந்தார். இவர் இந்த திட்டத்தில் சமர்ப்பித்திருந்த வங்கிக்  கணக்குக்கு கடந்த 14ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை பணம் வந்துள்ளது. இதையடுத்து இரு நாட்களுக்கு முன்பு  பணம் எடுக்க வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது இவரது  கணக்கில் ரூ.36.46 பைசா மட்டும் இருந்தது. இது தொடர்பாக வசந்தி கூறுகையில், கடந்த 14ஆம் தேதி  வரவு வைக்கப்பட்ட நிலையில், 15ஆம் தேதி பணத்தை  3 தவணைகளில் தலா ரூ. 236 வீதம் வங்கி நிர்வாகம் எடுத் துள்ளனர். இது தொடர்பாக எனக்கு எந்த குறுந்தகவலும் அலைபேசிக்கு வரவில்லை. வங்கியில் கேட்டால், அபராதத்  தொகை என அனுப்பி வைத்து விட்டனர். தமிழ்நாடு அரசு  சொல்லியதை சொன்னால், இது தனியார் வங்கி  என  அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மகளிர் உரிமைத் தொகை பயனாளியாக இருந்தும், என்னால் அந்த திட்டத்தை  முழுமையாக அனுபவிக்க முடியவில்லை என்றார். இது  தொடர்பாக திருப்பூர் மாவட்ட வங்கி மேலாளர் ரவி கூறு கையில், பாதிக்கப்பட்டவரின் புகாரை பெற்று, பரிந்துரைக் கும்படி சம்பந்தப்பட்ட தனியார் வங்கிக்கு கடிதம் அனுப் பப்பட்டுள்ளது, என்றார்.

பயிர்க் காப்பீடு, கடன் நிபந்தனைகளில்  மாற்றம் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

உடுமலை, செப். 26 - விவசாயிகளை பாதிக்கும் வகையில் இருக்கும் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு பெறவும், பயிர்க்கடன்  தவ ணைகளை திருப்பி செலுத்தவும் வேளாண்துறை விதித் துள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதி களில் பருவ மழை பெய்யாததால் தென்னை மற்றும் சிறு  தானிய பயிர்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டு உள்ளது.  மேலும் விவசாயிகள் தங்கள் விளைவித்த பயிர்களுக்கு கூட்டு றவு வேளாண் கடன் சங்கத்தின் மூலம்  பயிர்க்கடனும், வேளாண்துறையின் மூலம் பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ்  பயிர் காப்பீடும் செய்துள்ளார்கள். இவ்வகையில் பயிர்க்காப் பீடு திட்டத்தின் பயன்பெற கட்டுப்பாடுகள் உள்ளதையும், பயிர்க்கடன் திரும்பச் செலுத்தும் நிபந்தனைகளை மாற்ற  வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த காலங்க ளில் பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் பயன் பெற வேண்டும்  என்றால் மாவட்ட அளவில் அதிக சேதாரம் ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு பெற முடியும் என்ற நிலை இருந்தது. விவ சாயிகளின் பல்வேறு போராட்டங்கள் மூலம் கிராம அளவில்  பயிர்கள் சேதம் ஏற்பட்டால் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப் பீடு வழங்கப்பட்டது. தற்பொழுது மீண்டும் விவசாயிகள் விளைவித்த பயிர்களின் தன்மையை ஒன்றிய (பிளாக்) அடிப் படையில் சேத அளவை கணக்கீட்டு இழப்பீடு வழங்கும் முறை யாக மாற்றப்பட்டுள்ளது. இதை மாற்றி காப்பீடு செய்த பயிர் கள் எங்கு சேதம் அடைத்தாலும் அதற்கு உரிய நிவாரணம்  வழங்க வேண்டும். பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தில் மூலம்  தென்னை மரங்களுக்கு ஒரு வருடத் தவணையும், மக்காச் சோளம் பயிர் செய்ய ஆறுமாதகால தவனையும், கொண் டைக்கடலை பயிர் செய்ய இரண்டு மாத தவணையில் பயிர்க்க டன்களைத் திருப்பி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை யின்படி விவசாயிகளுக்குக் கடன் தரப்படுகிறது. ஆனால்  விவசாயிகளுக்கு வேளாண்மை செய்ய போதிய பணம் இல் லாமல்தான் கடன் பெறுகிறார்கள். தவணைகளை குறுகிய காலத்தில் திருப்பி செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதன் மூலம் மீண்டும் கடன் சுமை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் பாதிக்கப்படாமலும் இன்றைய வறட்சி நிலையை கருத்தில் கொண்டும் பயிர்க் கடன் குறித்த நிபந்தனைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.

ருத்ராபாளையத்தில் சிபிஎம் பொதுக்கூட்டம்

உடுமலை, செப். 26 - ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து அரசியல் விளக்க  பொதுக்கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மடத்துக்குளம் தாலுக்கா ருத்ராபாளை யத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் கூறிய தாவது,  ஒன்றிய மோடி அரசு அழிந்து போன  குலக்கல்வி முறையை மீண்டும் நடைமு றைப்படுத்தும் வகையில் விஸ்வகர்மா என்ற  பெயரில் திட்டம் கொண்டு வந்துள்ளது. மக் களை மீண்டும் பின்நோக்கி இழுத்துச் செல் லும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும். ஒன் றிய அரசில் அனைத்து துறைகளிலும் ஊழல்  நடைபெற்றுள்ளதை மத்திய தணிக்கைத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி சுமார் ரூ.  7.5 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடை பெற்றுள்ளது. மேலும் நாட்டின் பாதுகாப்பு முதல் அனைத்து துறைகளையும் தனியார் மயம் என்ற பெயரில் கார்ப்ரேட்டுகளுக்குத் தாரை வார்த்து வருகிறது. இப்படி மக்கள் விரோத போக்கைக் கடைப்பிடிக்கும் மோடி  அரசை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை தந்து வீட்டுக்கு அனுப்ப வேண் டும் என்றார். முன்னதாக நடைபெற்ற பொதுக்கூட்டத் திற்குக் கட்சியின் தாலுக்கா குழு உறுப்பி னர் கே.ஈஸ்வரன் தலைமை வகித்தார். தாலூக்கா செயலாளர் ஆர்.வி.வடிவேல், தாலுக்கா குழு உறுப்பினர்கள் எம்.எம். வீரப்பன், ஆர்.பன்னீர்செல்வம், வி.ராஜரத்தி னம், வி.ராதா, வேடபட்டி ஈஸ்வரன் உட்பட திர ளான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். மேலும் இந்த கூட்டத்தில் தீக்கதிர் ஆண்டு சந்தா நான்கு ஒப்படைக்கப்பட்டது.

பேருந்து தடைப்பட்டதால் மாணவர்கள், தொழிலாளிகள் அவதி

அவிநாசி, செப்.26- அவிநாசி கானூர் பகுதிக்கு வந்து செல் லும் ஏ10 பேருந்து முன்னறிவிப்பு இன்றி  நிறுத்தப்பட்டதால், இப்பகுதி மாணவர்கள் மற்றும் தொழிலாளிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின் றனர்.  திருப்பூர் மாவட்டம், அவினாசி ஒன்றியம்,  கானூர் ஊராட்சியில் 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஏ10  பேருந்து திருப்பூரிலிருந்து அதிகாலையில்  புறப்பட்டு அவிநாசி வழியாக கருவலூர்,  கானூர், சின்ன கானூர், மொண்டிபாளையம், ஆலத்தூர், புளியம்பட்டி பேருந்து நிலை யம் வரை சென்று. மீண்டும் புளியம்பட்டி யில் இருந்து ஏழு மணி அளவில் கிராமப்புற  வழியாக  கருவலூர் வந்தடைந்து திருப்பூர்  செல்வது வழக்கம்.  இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்பும்  இன்றி ஏ10 பேருந்து நிறுத்தம் செய்யப்பட் டுள்ளது. இதனால், கல்லூரிக்குச் செல்லும்  மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழி லாளர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடி யாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சுமார்  ஐந்து கிலோ மீட்டர் நடந்தோ அல்லது  வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டுச் செல்கின் றனர். அதேபோல, திருப்பூரிலிருந்து கருவ லூர் வழியாக கானூர்  மதியம் 3 மணிக்கு வரு கின்ற 12 சி பேருந்தும் வருவதில்லை. இதுகு றித்து மாவட்ட ஆட்சியரிடம் அப்பகு தியைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித் தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. உடனடியாக மாணவர்கள் மற்றும்  தொழிலாளர்களின் நலன் கருதி பேருந்து களை இயக்க வேண்டும். இல்லாவிட்டால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித் துள்ளனர்.

மிலாடி நபி, காந்தி ஜெயந்தி:  மதுபானக் கடைகளை மூட உத்தரவு

திருப்பூர், செப். 26 - திருப்பூர் மாவட்டத்தில் செப்.28 மிலாடி நபி மற்றும்  அக். 2 காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களை முன்னிட்டு, டாஸ் மாக் மதுபானக் கடைகள், அவற்றுடன் செயல்படும் மது பானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு  விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம்  பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை மூடப்பட்டு, மதுபா னங்கள் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் என மாவட்ட  ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் உத்திரவிட்டுள்ளார். தவறும்பட் சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய பிரிவுகளின் கீழ் நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் புகைப்பிடித்தால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பூர், செப்.26- பொது இடங்களில் புகைப்பிடித்தாலோ, புகையிலை  சார்ந்த பொருட்களை சுவைத்து உமிழ்தல் தண்டனைக்குரிய குற்றமாகும். அரசு அலுவலர்களின் ஆய்வின் போது கண்ட றியப்பட்டாலோ, உறுதி செய்யப்பட்டலோ உடனடி அபராத மாக முதன் முறையாக 100 ரூபாய், மீண்டும் அதே குற்றம்  தொடர்ந்தால் 200 ரூபாய், 500 ரூபாய் வரை வசூலிக்கப் படும். மேலும் தொடர்ந்தால் மூன்று மாதம் வரை சிறை தண்ட னையுடன் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு  சட்டம் இருப்பது குறித்த விழிப்புணர்வை, திருப்பூர் மாவட்டத் தில் சுகாதார துறையினர் ஏற்படுத்த வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவல் நிலையத்தில் சித்திரவதை? கண்ணீருடன் பெற்றோர்கள் புகார்

கோவை, செப்.26- கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட இளை ஞரை கோவை போலீசார் 5 நாட்கள் காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்ததாக, கோவை நீதிமன்றத்தில் நடு வரிடமும், கோவை மாநகர காவல் ஆணையரிடமும், பெற் றோர்கள் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவரின் பெற்றோர்கள் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 12 ஆம் தேதி கோவை காந்தி மாநகரை சேர்ந்த ரஞ்சித் என்பவரும், இவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த நித்திஷ், கார்த்திக். இவர் களில் ஒருவர் மீது ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டது (இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது). இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஞ்சித், நித்திஷ், கார்த்திக்  ஆகியோர் ஒரு ஆட்டோவில் நீதிமன்றத்தில் ஆஜராகினர். பின்னர், மீண்டும் ஆட்டோவில் புறப்பட்டு சென்று கொண்டி ருந்தனர். நஞ்சப்பா சாலையில் சென்றபோது, 4 வாகனங்க ளில் 8 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பின் தொடர்ந்து வருவதை பார்த்தனர். அவர்களிடமிருந்து தப் பிப்பதற்காக ஆட்டோவை ராம் நகருக்குள் சென்றனர். ஆட்டோ ராமர் கோவில் அருகே உள்ள தனியார் வங்கி முன்பு  சென்றபோது, அந்த கும்பல் ஆட்டோவை வழிமறித்து 3  பேரையும் அரிவாளால் ஓட ஓட வெட்டினர். இதில் 3 பேருக்கும் கை கால் மற்றும் உடலில் பலத்த வெட்டு காயம் ஏற்பட் டது. இந்த வழக்கு தொடர்பாக கோவை கீரணத்தம் பகுதி யைச் சேர்ந்த தனலட்சுமி என்பவரது மகன் கால்டாக்ஸி ஓட்டு நர் ஜெயகுமார் என்ற இளைஞரை விசாரனைக்காக அழைத்து சென்றனர். அதன் பிறகு தனது மகனை தேடி சரவணம்பட்டி காவல் நிலையம், மற்றும் காந்திபுரம் காட்டூர் காவல் நிலையம் என 5 நாட்களாக போலிசார் எனது மகனை கண்ணில் காட்டா மல் அலைகழித்தனர். அதன்பிறகு அவசர போலீஸ் உதவி எண்ணிற்கு அழைத்த பிறகு, மகனை காட்டூர் காவல் நிலை யத்தில் பார்த்ததாகவும், முகம் மற்றும் தாடை பகுதிகளில் காயங்களுடன் நடக்க முடியாத நிலையில் இருந்ததாகவும் வேதனையுடன் தெரிவித்தார். இந்த நிலையில் இரண்டு நாட் களுக்கு முன் போலீசார் தாக்கியதில் இரண்டு சிறுநீரகங்க ளும் பாதிக்கப்பட்ட நிலையில் கோவை அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் தாக்கியதில் கடுமையான காயங்களுடன் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக் கிறார். கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய காவல்துறை யினர் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நீதி வழங்க வேண் டும் என மனு அளித்துள்ளனர்.  இதுகுறித்து வழக்கறிஞர் ஜெயக்குமார் தெரிவிக்கும் போது, விசாரனைக்காக ஒருவரை காவல் நிலையம் அழைத்து சென்றால் முதலில் அவர்களது வீட்டிற்கு தகவல்  தெரிவித்திருக்க வேண்டும். மேலும் 24 மணி நேரத்திற்குள் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தியிருக்க வேண்டும் ஆனால் இந்த  வழக்கை பொருத்தவரை மனித உரிமைமீறல் நடந்துள்ளது,  என்றார்.

பாசனத்திற்கு முழுமையாக தண்ணீர் வழங்க கோரிக்கை

ஈரோடு, செப்.26- கீழ்பவானி பாசனத்திற்கு முழுமையாக தண்ணீர் வழங்க வேண்டும் என விவசாயி கள் வலியுறுத்தி உள்ளனர். கீழ்பவானி பாசனத்திற்கு ஆக.15 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு நடவு வேலை கள் தொடங்கியுள்ளன. ஆனால், அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் முழு மையாக சென்றடையவில்லை. அதை சரி  செய்வதற்கான ஆய்வுகளும் மேற்கொள் ளப்பட்டுள்ளன. விரைவில் முறை வைப்பது பற்றி அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காளிங்க ராயன் பாசனத்திற்கு ஏப்ரல் வரை தண்ணீர்  கொடுப்பதாக ஒரு செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து அமைச்சர் முத்துசாமி யிடம் நேரில் சென்று, கீழ் பவானி பாசனத் திற்கு முழுமையாக தண்ணீர் விட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கீழ் பவானி பாசனத்திற்கு போதிய நீர் இல்லாத  நிலையில் காளிங்கராயன் பாசனத்திற்கு  தண்ணீர் கொடுப்பது என்பது சாத்தியமற்ற தாக இருக்கும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், மாவட்ட ஆட்சியரிடமும், நீர்வளத் துறை செயற்பொறியாளரிடமும் மனு அளிக் கப்பட்டது. அதில் கீழ்பவானி பாசனத்திற்கு அறிவித்துள்ளபடி முழுமையாக தண்ணீர் வழங்குவதற்கு எவ்வித இடையூறும் இல் லாத வகையில் செயல்பட வேண்டும் என வலி யுறுத்தப்பட்டுள்ளது.

சிறையில் மோதல்: கண்காணிப்பாளரே காரணம்

கோவை, செப்.26- கோவை மத்திய சிறையில் நடைற்ற மோதல் சம்பவத்திற்கு முழுக்க முழுக்க சிறை கண்காணிப்பாளர் தான் காரணம் என வழக் கறிஞர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். கோவை மத்திய சிறையில் நடைபெற்ற மோதல் சம்பவத்தில் கைதிகள் மற்றும் காவ லர்கள் பலத்த காயமடைந்தனர். காயமடைந் தவர்கள் கோவை அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், காயமடைந்த கைதிகளை வழக்கறிஞர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் வழக்கறிஞர்கள் செய்தியாளர்களிடம் கூறிய தாவது, சிறையில் நடந்த மோதல் குறித்து  கைதிகளிடம் கேட்கச் சென்ற போது காவ லர்கள் சுற்றி நின்று கொண்டு கைதிகளை பேசவிடாமல் தடுத்தனர். சிறையில் நடந்த மோதல் சம்பவத்திற்கு முழுக்க முழுக்க சிறை  கண்காணிப்பாளர் மற்றும் சிவக்குமார், ராகுல், சடையன், ஷாஜகான் உள்ளிட்ட சில காவலர்கள் பெயரை கைதிகள் தெரிவித்த தாக வழக்கறிஞர்கள் கூறினார். மேலும், காயமடைந்த 7 கைதிகளின் வயிற் றில் கண்ணாடி, பிளேடு ஆகிய இருப்பதுடன்,  தனி சிறையில் அடைத்து இரவு நேரங்களில் தூங்குவிடாமல் தண்ணீர் ஊற்றுவதாகவும் சரியான முறையில் உணவு மற்றும் மருத்து வம் பார்க்கவில்லை என காவலர்கள் மீது  வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். இதுகுறித்து மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக் கப்பட்டுள்ளதாகவும், சட்டப் போராட்டம் நடத்த இருப்பதாக வழக்கறிஞர் தெரிவித் தார். எனவே, தமிழக அரசு தலையிட்டு, சம் பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தகுந்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறி ஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறை யில் கைதிகளை சந்தித்து குறைகளை கேட் கச் சென்ற வழக்கறிஞர்களை ஷூ மற்றும் சட் டையை கழட்டுமாறு சிறைக்காவலர்கள் வலியுறுத்தியதாக வழக்கறிஞர்கள் குற்றஞ் சாட்டினர்.

பட்டுக்கூடு ஏலம்

தருமபுரி, செப்.26- தருமபுரியில் பட்டு வளர்ச் சித்துறை சார்பில் செயல் பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து விவ சாயிகள் பட்டுக்கூடுகளை விற் பனைக்கு கொண்டு வருகின் றனர். இந்த அங்காடிக்கு திங் களன்று 3,307 கிலோ பட் டுக்கூடுகள் கொண்டு வரப் பட்டன இதில் ஒரு கிலோ பட் டுக்கூடு அதிகபட்சமாக ரூ.565க்கும், குறைந்தபட்ச மாக ரூ.248க்கும், சராசரி யாக ரூ.435.82க்கும் விற்ப னையானது. மொத்தம் ரூ.14 லட்சத்து 41 ஆயிரத்து 244க்கு விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.