districts

img

கனமழையால் நிர்க்கதியாக்கப்பட்ட மக்களின் கண்ணீரை துடைத்த மாதர் சங்கம்

2023 ஆம் ஆண்டில் மிக்ஜம் புயலால்  பொழிந்த கனமழையால் சென்னை,  திருவள்ளூர், காஞ்சிபுரம்  உள்ளிட்ட மாவட்டங்களும் வரலாறு காணாத மழையால் திருநெல்வேலி, தூத்துக் குடி, கன்னியாகுமரி,தென்காசி ஆகிய தென்மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  விவசாயம் அழிவு...வீடுகள் சேதம்...பொருட்களோடு உயிர்களும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட கொடுமை....நிர்க்கதியான நிலையில் மக்கள், சிறுகுறு வியாபாரிகள், மீன வர்கள், பல்வேறு தொழிலாளர்கள்.  மழைவெள்ளத்தால் மருத்துவமனை யும் மூழ்கிவிட்டது..வீடும் போய் விட்டது.. குழந்தையை எப்படி பாது காப்பாக பெற்றெடுக்கப் போறேன் என்ற பரிதவிப்பில் கர்ப்பிணிப் பெண்கள். வீட்டுக்குள் திமுதிமுவென்று தண்ணீர் வந்துவிட்டது. ஓடவும் முடி யாது எழுந்து நடக்கவும் முடியாது.   சுவரை பிடித்துக்கொண்டு எதிர்வீட்டு திண்ணையில் விடியவிடிய உட்கார்ந்த நாட்களை மறக்கமுடியாது என்று கூறுகின்றனர் மாற்றுத்திறனாளிகள். நெல்லையை புரட்டிப்போட்ட மழை வெள்ளம்....1992 இல்  இதுபோன்று எதிர்பாராத மழைவெள்ளத்தால்  பாப நாசம் அணையை திறந்துவிட வேண்டிய நிர்ப்பந்தம்...நள்ளிரவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் பாநாசம் பகுதியில் பல குடும்பங்கள் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.  2023இல் இப்படியொரு மழையை எதிர்பார்க்கவில்லை. டிசம்பர் 26 ராதாபுரம் தாலுகா கூத்தங்குழி என்ற கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சங்கத்தின் மாநிலத்தலைவரும் நெல்லை மாவட்ட நிர்வாகிகளும் சந்தித்தோம். 1800 வீடுகள்...10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட மீனவ கிராமம். மாற்றுத்திறனாளிகள் இல்லாத வீடுகளே கிடையாது.. கடலை  நம்பித்தான் வாழ்வாதாரம். பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துவிட்டன. பல வீடுகள் இடிந்து விழும் சூழலில் உள்ளன. மண் சுவரை  கயிறு வைத்து இழுத்துகட்டி வைத்துள்ளனர். தெருசாலைகளை வெள்ளம் அரித்துக்கொண்டு போய்விட்டது. “ஒருவாரமாக வீட்டைவிட்டு வெளியே போக முடியல..வீட்டுப்  பொருட்களை தண்ணீர் கொண்டு போயிடுச்சு..குழந்தைகள் முதல் பெரி யவர்கள் வரை பசியால் துடிக்கிறார் கள். கம்யூனிஸ்ட் கட்சியும் மாதர் சங்க மும் தான் முதன்முதலாக வந்திருக் கீங்க” என்று அந்த மக்கள் கூறியதும் அனைவரும் ஒரு நிமிடம் உறைந்து போனோம். கொண்டுசென்ற பொருட் களை  ஒரு பகுதி மக்களுக்குத்தான் கொடுக்க முடிந்தது. அவர்களுக்கு அவ்வளவு சந்தோசம்.  அதனை கண்களில் காணமுடிந்தது.

 குப்பைகளான பொருட்கள்

நெல்லை நகரத்தில் பெரிய கடை களிலுள்ள பொருட்கள் எல்லாம் சேதமாகி இனிமேல் பயன்படுத்த முடி யாது என்று குப்பைகளோடு குப்பை யாக தூக்கிப்போட்டுக் கொண்டி ருந்தனர். பாத்திரக்கடைகளில் ஊழி யர்கள் பாத்திரங்களை துணியால் துடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட பூ கட்டும் பெண் தொழிலாளி கூறுகையில், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கணவருக்கு உடல்நலம் சரியில்லை. நான் உழைத்தால்தான் குடும்பத்தை பாதுகாக்க முடியும். வெள்ளம் வந்த பிறகு சாப்பாட்டிற்கே  கஷ்டப்படும் நிலை வந்துவிட்டது என்று வேதனை யுடன் தெரிவித்தார். “எனக்கு கணவர் கிடையாது. வாடகை வீட்டில்தான் வசிக்கிறேன். கூலி வேலைக்குச் சென்றால்தான் எனது பிள்ளைகளை காப்பாற்ற முடியும்..இப்ப மழை வந்து எல்லாமே போச்சு” என்று தனிப்பெண் ஒருவர் கண்ணீர் மல்க கூறினார். “உதவி செய்யுங்கள்”  எந்த ஆதரவும் இல்லை. மாற்று திறனாளியாகவும் இருக்கிறேன். தனியாகத்தான் இருக்கிறேன். எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று  மாற்றுத்திறனாளி பெண் வேண்டு கோள் விடுத்தார். இப்படி பல பகுதிகளில் பலவித மான பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க முடிந்தது. நாம் கொண்டுசென்ற பொருட்களை கொடுத்தோம். பாப்பாக்குடி பகுதியில் முக்கூடல்,  ரஸதா புதுக்காலனி,  முத்துமாலை புரம் ஆகிய பகுதிகளுக்கு சென்றோம். தெருச்சாலைக்கும் வீட்டிற்கும் வித்தியாசமில்லை. சாக்கடை கலந்த சேற்றை அகற்ற பல மாதங்கள் ஆகும்.  அதுவரை மக்கள் எங்கே தூங்கு வார்கள்? எங்கே சமைத்து சாப்பிடு வார்கள்? என்ற கேள்வி எழுந்து நிற்கிறது. 

மகனை இழந்த தாயின் வேதனை

ஒரு சில வீடுகள் இடிந்து விழுந்துள் ளன. மழைவெள்ளம் சூழ்ந்துவிட் டது. கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் வாலிபர் சங்கம், விவசாயத்தொழி லாளர் சங்கத் தோழர்களும் உள்ளூர் பஞ்சாயத்துதலைவரும் சேர்ந்து கயிறுகட்டி இழுத்து எங்களை பாது காப்பாக மண்டபத்திற்கு கொண்டு வந்தாங்க. .நீயும் வா தம்பி என்று 27 வயதான கடைசி மகனை அழைத் தேன். நீங்க போங்கம்மா, .பத்திர மாக இருங்கம்மா. நான் வீட்டை பார்த்துக்கொள்கிறன் என்று கூறிய தால் நான் போயிட்டேன்.  மண்டபம் போய் சேருவதற்குள் வீட்டுக்குள்ளே தண்ணீர் வந்ததால் மின்வயர் அறுந்து விழுந்தது தெரியாமல் ஷாக்அடித்து இறந்துவிட்டான்  என்று அந்த தாய் தரையில் உருண்டு புரண்டு அழுத காட்சி அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. நிவார ணப்பொருட்களை கொடுத்துவிட்டு ஆறுதல் சொன்னோம். சேரன்மகாதேவி மேலச்செவல் ஊரின் பிள்ளையார் கோவில் முன்பு  மாற்றுத்திறனாளிகள் எங்களை வரவேற்றார்கள். பாதிப்பு குறித்து விசாரித்து அறிந்தோம். நிவாரணப் பொருட்கள் வழங்கிவிட்டு வரும் போது,  நாங்க பாதிக்கப்பட்டதை அறிந்து  சென்னையிலிருந்து வந்திருக்கீங்க...ரொம்ப நன்றி என்று வழியனுப்பி வைத்தார்கள். 

ஆடும் போச்சு..  வருமானமும் போச்சு 

நான்குனேரி பெருமாள்நகரில்  பெண் விவசாயத்தொழிலாளி கூறு கையில், எனது வீடு வயல்காட்டுக்குள் தனியாக உள்ளது. பக்கத்தில் பெரிய கிணறு. மழைவெள்ளத்தில் வீட்டுக்குள் தண்ணீர்வந்துவிட்டது. வயல் மூழ்கி விட்டது...கிணறு நிரம்பி தண்ணீர் வெளியே வந்தவண்ணம் உள்ளது..வீட்டைவிட்டு வெளியே வரமுடியல. மூன்றுநாள் கழித்து வெளியே வந்து பார்த்தால் 2 ஆடுகள் இறந்து கிடந்தன. பாம்புகள் அதிகமாக வரத் தொடங்கின. யாருக்காவது போன் போடலாம் என்று எடுத்துக்கொண்டு கிணற்றுக்கு அருகில் வந்தேன் .கை தவறி போன் கிணற்றில் விழுந்து விட்டது. ஒருவார காலம் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. ஆடும் போச்சு..வருமானமும் போச்சு  என்று மனவருத்தத்துடன் பேசி னார். அந்த பெண்மணிக்கு ஆறுதல் கூறினோம். நிவாரணமும் கொடுத்தோம்.

மக்களை மீட்ட ஆட்சியரின் நடவடிக்கை

சேரன்மகாதேவி தாலுகா கொழு மடை பகுதியிலிருந்து  டிசம்பர் 18  அதிகாலை 3 மணிக்கு எனக்கு  ஒரு போன் வந்தது. “அக்கா தண்ணீர் ஊருக்குள் வந்துகொண்டேயிருக்கு. வீடுபாதி மூழ்கிவிட்டது. எங்கள் தெருவில் 30 குடும்பங்கள்  இருக்கு...யாரையும் யாரும் காப்பாற்றமுடியாது. வீட்டுப்பொருட்கள் எல்லாம் போச்சு. தண்ணீர் இழுத்துவிடும் போல் உள்ளது .எங்களை காப்பாற்றுங்கள்” என்று  மாற்றுத்திறனாளி பெண் கூறி னார். உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவருக்கு  வாட்ஸ்அப்பில் பதிவு செய்த அடுத்த நிமிடம் பதிலளித்தார், அரை மணி நேரத்தில் பேரிடர் மீட்புக்குழுவை வரவழைத்து கொழுமடை மக்களை கயிறுகட்டி காப்பாற்றி மண்டபத்தில் பாதுகாப்பாக தங்கவைத்து,  புகைப்படம் எடுத்து அனுப்பிவைத்தார். உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களை மீட்ட  ஆட்சியருக்கு  மாதர் சங்கம் நன்றியை தெரிவிக்கிறது. மழைவெள்ளத்தில் உடைமைகள் அடித்துச்செல்லப்பட்டு, ஆடைகள்  கூட இல்லாத  முக்கூடல் அண்ணா நகர் பகுதி குழந்தைகள் 75 பேருக்கு நைட்டி, கவுன், சுடிதார் வழங்கப் பட்டது. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் நன்றி கூறினர். 

மக்களுடன் மாதர் சங்கத்தினர்
மூன்று நாட்களும் முழுமையாக பாதிப்பு பகுதிகளை பார்க்கமுடிய வில்லை என்றாலும் ஓரளவிற்கு  பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பாதிக்கப்பட்டமக்களையும் நேரடி யாக சென்று சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து  குறைந்த பட்ச தேவையைத்தான் நிவாரணமாக கொடுக்க முடிந்தது.  பாதிக்கப்பட்ட நெல்லை சிந்து பூந்துறைக்கு  சென்றபோது  குழந்தை களின் புத்தகங்கள் ரோட்டில் காய்ந்து கொண்டிருந்தன. வீட்டுக்குள் எதுவு மில்லை. சேறும்சகதியும் மட்டும் தான் மிஞ்சியது...சமையல் பாத்திரங்கள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. மக்களின் கண்ணீரை துடைக்கும் பணியில் ஜனநாயக மாதர் சங்கத்தி னர் களத்தில் நின்றனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் வாலண்டினா, நெல்லை மாவட்டத் தலைவர்கள், நெல்லை சிபிஎம் தோழர்கள், இன்சூரன்ஸ் மற்றும் சில தொண்டு நிறு வனங்கள்  நிவாரணப் பொருட்கள் கொடுத்து உதவினர். அவர்களுக்கும் பள்ளி கல்லூரி நண்பர்களுக்கும் ஜனநாயக மாதர் சங்கத்தின் நெல்லை மாவட்டக்குழு நன்றியை உரித்தாக்குகிறது.