districts

img

வழித்தடங்களில் குறைக்கப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்கிடுக

கோவை, அக்.7 -  கொரோனா தொற்று பரவல் காலத்தில் குறைக்கப்பட்ட அரசு  பேருந்துகளை மீண்டும் அதிகப் படுத்தி இயக்கிட வேண்டும் என மாதர் சங்கத்தினர் கோவை அரசு போக்குவரத்து கழக தலைமை பணிமனையின் மேலாளரிடம் கோரிக்கை மனுக்களை அளித் தனர். இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் சுதா  அளித்த மனுவில் தெரிவித்துள்ள தாவது, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் பெண்களின்  உரிமைக்காக தொடர்ந்து போராடு கிற இயக்கமாகும். சமீப காலமாக அரசு பேருந்துகளில் பெண்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பொதுவாகவே பெண்கள் வேலைக்கு செல்லவும்,  கல்லுரிகளுக்கு, பள்ளிகளுக்கு செல்வது அதிகம் நமது மாவட் டத்தில் அரசு பேருந்துகளை பயன் படுத்தி வருகின்றனர்.

இந்நிலை யில், மகளிருக்கு கட்டணமில்லா அரசு பேருந்துகளில் பெண்களின் சுயமரியாதையை ஒரு சிலர் சீண்டு கின்றனர். இந்த இலவச பேருந்து களை மகளிர் மட்டும் பேருந்து களாக மாற்றிட வேண்டும். கொரோனா தொற்று பரவல் காலத்தில் வழித்தடங்களில் அரசு பேருந்துகள் குறைக்கப்பட்டது. தற்போதுவரை அந்த வழித்தடங் களில் பேருந்துகள் இயக்கப்படுவ தில்லை. ஆகவே, மீண்டும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். மகளிர்  இலவச பேருந்தில், சில வழித்தடங் களில் பெண்களை மரியாதைக் குறைவாக நடத்துவது தொடர் கிறது. பேருந்துகள் முறையாக நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்வது போன்ற குறைபாடுகள் உள்ளது. இதனை போக்குவரத்து கழக நிர்வாகம் சரி செய்ய வேண்டும். பண்டிகை காலம் நெருங்குவதால், கூடுதலான பேருந்துகளை இயக்குவது, மகளிர் மட்டும் பேருந்துகளை இயக்குவது ஆகியவைகள் இன்றைய பொருளாதார சூழலில்  பெண்களுக்கு மிகவும் பயனுள்ள தாக இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.  முன்னதாக, கோவை அரசு போக்குவரத்து கழக தலைமை பணிமனை மேலாளரிடம் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் கோவை மாவட்ட தலைவர் ஜோதிமணி, செயலாளர் ஜி.சுதா, பொருளாளர் உஷா மற்றும் நிர் வாகிகள் ராஜலட்சுமி, சாந்தா மணி, ஜீவாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.