திருப்பூர், மார்ச் 13 - புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட மாணவி யின் மரணத்திற்கு நியாயம் கேட்டும், பாதிக் கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வலி யுறுத்தியும், போதை கலாச்சாரத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கருவம்பாளையம் பகுதியில் செவ் வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்திற்கு மாதர் சங்கத்தின் தெற்கு நகர தலை வர் மினி தலைமை வகித்தார். இதில், மாதர் சங்க தெற்கு நகரச் செயலா ளர் பானுமதி, மாவட்டச் செயலாளர் சரஸ் வதி, மாவட்ட பொருளாளர் கவிதா, மாவட்டத் துணை செயலாளர் ஆர்.கே.செல்வி, மாவட்டத் தலைவர் பவித்ரா தேவி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். மாவட்டக் குழு உறுப்பினர் செல்வி நன்றி கூறினார்.