திருப்பூர், நவ. 2 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க திருப்பூர் மாவட்ட குழு சார்பில் வியாழனன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பண்டிகை பஜார் இயக்கம் நடத்தப்பட்டது. இந்த இயக்கத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.லட்சுமி தலைமை ஏற்றார். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேன் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் துணைச் செயலாளர் செல்வி, மாவட்ட துணைத்தலைவர் சகிலா, மாவட்டப் பொருளாளர் கவிதா, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பானுமதி, மாவட்டத் தலைவர் பவித்ராதேவி, மாவட்டச் செயலாளர் கு.சரஸ் வதி ஆகியோர் உரையாற்றினர்.இதில் மாதர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இறுதியாக வடக்கு ஒன்றிய செயலாளர் சி.பானுமதி நன்றி கூறினார். இந்த இயக்கத்தில் விலைவாசி உயர் வுக்கு எதிராக ஒப்பாரி வைத்தும், தண்ணீ ரில் களிமண்ணால் ஆன தின்பண்டங்கள் செய்தும் நூதன வடிவில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.