திருப்பூர், ஏப். 14 - திருப்பூர் தொகுதி சிபிஐ வேட்பாளர் கே.சுப்பராயனுக்கு வாக்கு கேட்டு, ஊத்துக்குளி பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சி யினர் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்தியா கூட்டணியின் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி சிபிஐ வேட்பாளர் கே.சுப்பராயனுக்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஊத்துக்குளி பேரூராட்சி முழுவதும் ஞாயிறன்று இரு சக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. 10 மையங்களில் மக்களிடம் வாக்கு சேகரித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் உரை யாற்றினர். இந்த பிரச்சார இயக்கத்திற்கு தாலுகா குழு உறுப்பினர் சிவசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ஆர்.குமார், மாவட்டக் குழு உறுப்பினர் சரஸ்வதி, தாலுகா செயலாளர் கொளந்தசாமி, தாலுகா குழு உறுப்பினர் ஆர். மணியன், குன்னம்பாளையம் கிளைச் செயலாளர் மாரி முத்து, முன்னாள் தாலுகா குழு உறுப்பினர் வி.கே.பழனிச் சாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றியச் செயலா ளர் பாலமுரளி ஆகியோர் உரையாற்றினர். இந்நிகழ்வில் திர ளானோர் கலந்து கொண்டனர். திருப்பூர் 25ஆவது வார்டு இதேபோன்று, திருப்பூர் 25 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வீடு வீடாக மக்களை சந்தித்து கதிர் அரிவாளுக்கு வாக்குக் கேட்டு ஆதரவு திரட்டினர்.