நாமக்கல், அக்.27- மழைநீர், சாக்கடை கழிவுநீரை அகற்ற வலியுறுத்தி எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் கொசு பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ் சாலை துறை சார்பில் இருபுறமும் சாலை அகலப் படுத்தும் பணிகள் நடைபெற்றது. அப் போது எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள சாக்கடை கால் வாய் தாழ்வான பகுதியில் அமைக்கப் பட்டது. இதனால், மழைக்காலங்களில் மழை நீர் மற்றும் சாக்கடை கழிவுநீர் வெளியே றாமல் அப்பகுதி முழுவதும் தேங்கி நிற் கிறது. இதுகுறித்து, பலமுறை அரசு அதிகாரி களுக்கு முறையிட்டு எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொசு பிடிக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஒன்றியச் செய லாளர் கே.எஸ்.வெங்கடாசலம் தலைமை ஏற்றார். ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ், மாவட் டக்குழு உறுப்பினர் பழனியம்மாள், முன்னால் ஒன்றிய செயலாளர் பி.சுரேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.மாரிமுத்து, ஈஸ்வரன், கிட்டுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.