நாமக்கல், டிச.26- நாமகிரிப்பேட்டை அருகே சாலை ஆக்கி ரமிப்பை அகற்ற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், உடனடி யாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம், பெருமாகவுண்டம்பாளையம் கிராமத்தின் வழியாக ஓடுவன்குறிச்சி முதல் ஜேடர்பாளையம் வரையிலான சாலை ஒன்று செல்கிறது. இச்சாலையில் சர்வே எண்: 12-1/208ல் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடி யாக அகற்ற வலியுறுத்தியும், அரசுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள சாலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் செவ்வாயன்று முதல் தொடர் காத்திருப்புப் போராட்டத்தை, பெருமாகவுண்டம்பாளை யம் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடத்துவதாக அறி விக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் எஸ்.கந்தசாமியை, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, வியாழக் கிழமைக்குள் மேற்கண்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக ஆட்சியர் வாக்குறுதி அளித் தார். இதனிடையே, திட்டமிட்ட அடிப்படை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரு மாகவுண்டம்பாளையம் கிளைச் செயலாளர் எஸ்.அஜித் குமார் தலைமையில் சுமார் 150க் கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத் திற்கு திரண்டனர். அப்போது, போராட் டத்தை துவக்கி வைக்க வந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி பேசுகையில், மாவட்ட ஆட்சிய ரின் வாக்குறுதியின் அடிப்படையில் இரண்டு நாட்கள் பொறுத்திருப்போம். வாக்குறு தியை நிறைவேற்றாவிட்டால், வரும் ஜன.1 ஆம் தேதி நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன் றிய அலுவலகத்தின் முன்பாக ஆக்கிர மிப்பை அகற்றும் வரை சமைத்து சாப்பிட்டு தொடர் காத்திருக்கும் போராட்டத்தை நடத்து வோம், என்றார். முன்னதாக, இப்போராட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்கசாமி, ஏ.டி.கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் கே.சின்னசாமி, தமிழ் நாடு விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வி.பி.சபாபதி மற்றும் ஜே. ரமேஷ்குமார், ஆர்.கதிரேசன், ஏ.கும ரேசன், குபேந்திரன், கவியரசன் உட்பட அப்ப குதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.