districts

img

பல்லகவுண்டம்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மே 26 - ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், நடுப்பட்டி ஊராட்சி, தென்றல் நகர் மற்றும் கூனம்பட்டி ஊராட்சி, காவேரி நகர்  பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க கோரி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளியன்று பல்லகவுண்டம் பாளையம் நால் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நடுப்பட்டி, கூனம்பட்டி ஊராட்சிகளின் கிராமசபைக் கூட் டங்களில் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண தீர்மா னம் நிறைவேற்றியும் நடைமுறைப்படுத்தாமல் இருப்ப தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப் பட்டன. தென்றல் நகர் கிளை சார்பில் ஆர்.பழனிசாமி தலைமை  வகித்தார். காவேரி நகர் கிளை கே.அச்சுணன் முன்னிலை யில் ஊத்துக்குளி தாலுகாக்குழு உறுப்பினர்கள் வி.காமராஜ்,  கே.பிரகாஷ், இன்ஜினியரிங் சங்க மாவட்ட செயலாளர் ஜெ. கந்தசாமி, பல்லகவுண்டம்பாளையம் கிளைச் செயலாளர்  கே.கண்ணையன், மாதர் சங்க கிளைச் செயலாளர் வி.மீராலட் சுமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கட்சியின் தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார் ஆகியோர் சிறப் புரையாற்றினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். தென்றல் நகர் ஆர்.லிங்கப்பன் நன்றி கூறினார்.