districts

img

உள்ளாட்சி நடுவன் மன்ற தீர்ப்பை அமல்படுத்திடுக நகராட்சி ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கட்சி நேரில் மனு

அவிநாசி, ஜன. 20 - திருமுருகன்பூண்டி நகராட்சி யில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆணையர் அப்துல் ஹாரிஸை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்மன்ற உறுப்பினர்கள், நிர்வாகி கள் நேரில் சந்தித்து, உள்ளாட்சி நடு வன் மன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கோரினர். தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட் டமன்றத் தேர்தலில் திராவிட முன் னேற்ற கழக ஆட்சி அமைந்த உடன்,  பேரூராட்சியாக இருந்த திருமுருகன் பூண்டி, நகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டது. இந்த நகராட்சி ஆணையராக  சம்சுதீன் என்ற அலுவலர் பணியாற்றி  வந்தார். இவரை மாற்றம் செய்யும் படி நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் கோரிக்கை விடுத்து வந்தனர். இத னைத் தொடர்ந்து சம்சுதீன் மாற்றப் பட்டு, பவானி நகராட்சியில் பணி யாற்றி வந்த தாமரை என்ற ஆணை யரை இங்கு நியமனம் செய்தனர். எனி னும் இவர் பொறுப்பேற்றவுடன் விடுப்பில் சென்று விட்டார்.  இதையடுத்து சில மாதங்களில்  நகராட்சி ஆணையர்களாக அடுத்த டுத்து நியமிக்கப்பட்டவர்களும் நீண்ட நாள் நீடிக்கவில்லை.

சம்சுதீன்  தொடங்கி இதுவரை ஐந்து ஆணை யர்கள் இங்கிருந்து மாறிச் சென்று விட்டனர். பொதுவாக இங்குள்ள செல்வாக்கு மிக்க சில நகர்மன்ற உறுப்பினர்களின் நிர்பந்தம் காரண மாகவே ஆணையர்கள் நீடித்து பணி யாற்ற முடியாமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது புதிய  நகராட்சி ஆணையராக அப்துல்  ஹாரிஸ் நியமனம் செய்யப்பட்டுள் ளார். இவரை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நகராட்சி கிளைகள்  சார்பில் நகர்மன்ற உறுப்பினர்கள் சுப் பிரமணியம், தேவராஜன், பார்வதி சிவக்குமார் மற்றும் கட்சியின் ஒன் றியக் குழு உறுப்பினர் பாலசுப்பிரம ணியம் மற்றும் கிளைச் செயலாளர் கள் நேரில் மனு அளித்தனர். அம்மனுவில் நகர்மன்ற தேர்தல்  நடைபெற்று முடிந்து ஓராண்டு கடந்த நிலையில் மக்களின் அடிப்படை பிரச் சனைகளை தீர்க்கக் கோரியும், நக ராட்சி நிர்வாகத்தில் பொதுமக்கள் வரி செலுத்துவதற்கு அலைக்கழிக் கப்படுவதை கண்டித்தும், வீட்டுக்  குடிநீர் இணைப்பு வழங்கிய முறை கேட்டில் உள்ளாட்சி நடுவன் மன்ற  தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.