சேலம், மார்ச் 16- சேலம், லீ பஜார் பகுதியில் மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த னர். சேலம் மாநகரம், லீ பஜார் பகுதியில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தென்னிந்தியாவில் மிக முக்கியமான வியாபார பகுதியான இங்கு தினமும் பல கோடி ரூபாய் களுக்கு வர்த்தகம் நடைபெறும். மேலும், இப்பகுதியின் வழி யாக சிறுமலர் பள்ளி, ஜெயரானி பள்ளி, வித்யா மந்திர் பள்ளி போன்ற கல்வி நிலையங்களுக்கு மாணவர்கள் செல்கின்ற னர். இப்படிப்பட்ட பகுதியில் அதாவது, சூரமங்கலம் லீ பஜார் பிரதான சாலையில், நீரோடை அருகே அரசு மதுபா னக்கடை வைக்க அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகி றது. ஏற்கனவே இப்பகுதியில் இயங்கி வந்த மதுக்கடை யால் பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டதை யடுத்து, பெரும் எதிர்ப்பின் காரணமாக மதுக்கடை அகற்றப் பட்டது. இந்நிலையில், வழிவாய்க்கால் காளியம்மன், அன்ன காமாட்சியம்மன் கோவில், செல்வ விநாயகர் கோவில் ஆகி யவற்றிற்கு மிக அருகில் மதுக்கடை வைப்பதற்கு தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை எக்காரணம் கொண் டும் அனுமதிக்க முடியாது. எனவே, மேற்படி பகுதியில் மதுக் கடை வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் வடக்கு மாநகரக்குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், சிபிஎம் வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன் குமார் உட்பட அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.