அவிநாசி, அக். 28- ஆட்டையம்பாளையத்தில் பழுத டைந்து மோசமான நிலையில் உள்ள பெண்கள் பொதுக்கழிப்பிடத்தை பராமரிப்பு செய்வது உள்பட மக்க ளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி சார்பில் அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஏ. சண்முகம், ஆர்.பழனிச்சாமி, ஏ. ராஜன், கிளைச் செயலாளர்கள் சந்தி ரசேகரன், சுப்பிரமணி, ராஜாமணி ஆகியோர் ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தில் வெள்ளிக்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது: வேலாயுதம்பாளையம் ஊராட் சிக்கு உட்பட்ட ஆட்டையம்பாளை யம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 18 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொதுக் கழிப்பிடத்தில் தற்போது தண்ணீர் தொட்டி, குழாய்கள், கதவு கள் உள்ளிட்ட அனைத்தும் உடைந்து, புதர் மண்டி மிகவும் பழு தடைந்து மோசமாக உள்ளது. இத னால், இரண்டு ஆண்டுகளாக அப்ப குதி பெண்கள் பொதுக் கழிப்பிடத் தைப் பயன்படுத்த முடியாமல் மிக வும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுக்கழிப்பிடத்தை பராமரிப்பு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரதிநகரில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள 2ஆவது மற்றும் 4ஆவது வீதிகளில் சாலை, சாக்கடை, தெரு விளக்கு வசதிகள் இல்லை. சாலை களும் குண்டும் குழியுமாகவும், மண் சாலையாகவும் உள்ளது. மழைக்கா லங்களில் சேறும், சகதியுமாக இந்த சாலை இருப்பதால் பல்வேறு இன் னல்களுக்கு மக்கள் ஆளாகின்ற னர். மேலும் சாக்கடை கழிவுநீரும் ஆங்காங்கே தேங்கி நின்று துர் நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. சாலை, சாக்கடை, தெருவிளக்கு வசதிகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டையாம்பா ளையம் மெயின் ரோட்டிலிருந்து கருப்பராயன் கோவில் வரை சாக் கடை வசதி செய்து தருவதோடு பழைய சாக்கடையை சுத்தம் செய்ய வும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2009-2010 ஆம் ஆண்டு கட்டப்பட்டு பயன்பாடில் லாமல் உள்ள சுடுகாட்டை சுத்தம் செய்து குடிநீர், தெருவிளக்கு வசதி செய்ய வேண்டும். ஆட்டையாம்பா ளையத்தில் உள்ள பழுதடைந்த சுய உதவிக்குழு கட்டிடத்தை பராமரிப்பு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, இங்குள்ள மக்க ளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்குமாறும் மார்க் சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. மின் விளக்கு பராமரிப்பு குறித்து மின்வாரிய உதவி பொறியாளரிட மும் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு அளித்து கோரிக்கையை வலியுறுத் தினர்.