districts

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு நிதி ஒதுக்கி உடனே புனரமைக்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூர், ஜூன் 21 – திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை  ஆலைக்கு நிதி ஒதுக்கி உடனடியாக புனர மைப்பு பணியை மேற்கொள்ளுமாறு தமிழக  அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தி உள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மூர்த்தி தலை மையில் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ். மாவட்ட செயலாளர் செ.முத்துக்  கண்ணன் உள்பட மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட் டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வரு மாறு:

பாஜகவின் சீர்குலைவு அரசியல்

திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சி யில் உள்ள பாரதிபுரம் பகுதியில் இலவச வீட்டு மனைப்பட்டா பெற, பல ஆண்டு காலம்  நீடித்த போராட்டத்திற்கு பிறகு, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், இடு வாய் ஊராட்சி மன்ற தலைவர் கே.கணேசன் ஆகியோரது தொடர் முயற்சியின் பலனாக 33 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வருவாய்த்துறை மூலம் வழங்கப்பட் டுள்ளது. அவர்களுக்கு உரிய இடங்களை அளந்து காட்டி கொடுத்த பிறகு அவர்கள் வீடு  கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிமுகவினர் சிலர் சேர்ந்து கொண்டு, வீடு கட்ட முயற் சித்த பயனாளிகளை மிரட்டி, பட்டா விற்காக விண்ணப்பித்திருக்கும் மக்களை தூண்டிவிட்டு அவர்களுக்கு எதிராக ரக ளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சம்பவ இடத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க  சென்ற ஊராட்சி மன்ற தலைவர் கணேசனை யும் பாஜகவினர் தாக்க முற்பட்டுள்ளனர். இடுவாய் ஊராட்சியில் பாஜகவினர் தங்க ளது வழக்கமான சீர்குலைவு அரசியலை மேற்கொண்டு, மக்களிடையே குழப்பம் விளைவிக்கவும், நல்லிணக்கத்தை சீர்கு லைக்கவும் முனைந்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கி றது. பாஜகவினரின் இத்தகைய மோசமான நடவடிக்கைகளை புரிந்து கொண்டு இடு வாய் ஊராட்சி மக்கள் நிராகரிக்க வேண் டும்.

அமராவதி சர்க்கரை ஆலை

தமிழ்நாட்டில் 1961 ஆம் ஆண்டு உருவாக் கப்பட்ட முதலாவது கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆன அமராவதி கூட்டுறவு சர்க்கரை  ஆலை தற்போது அழிவின் விளிம்பில்  உள்ளது. ஏறத்தாழ 250 ஏக்கர் பரப்பளவில்  இரண்டு அலகு அரவைகள் மூலம் நாளொன் றுக்கு 1500 டன் சர்க்கரை உற்பத்தியாகி வந்த  இந்த ஆலையில், தற்போது 350 முதல் 500  டன் மட்டுமே சர்க்கரை உற்பத்தி நடைபெறு கிறது. கடந்த 20 ஆண்டு காலமாகவே எந்த வித சீரமைப்பு பணியும் நடைபெறாத நிலை யில், ஆலையில் உள்ள எந்திரங்கள், பாய்லர்  போன்றவை மிகவும் பழுதடைந்து விட் டன. இதனால் பிழி திறன் கடுமையாக பாதிக் கப்பட்டு விவசாயிகளுக்கும், ஆலைக்கும் பெரிய அளவில் நட்டம் ஏற்படுகிறது. தற்போ தைய நிலையில் ஆலையை உடனடியாக புன ரமைக்காவிட்டால், அடுத்த ஆண்டு இந்த ஆலை முற்றிலும் செயலிழந்து விடும். இதனால், பிரதான ஆயக்கட்டு பகுதியான  அமராவதி பாசன கரும்பு உற்பத்தியாளர் கள் மிகப்பெரும் இழப்பை சந்திப்பார்கள். எனவே, அமராவதி சர்க்கரை ஆலை புன ரமைப்பு செய்வதற்கும், ஆலையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கும் தமிழ் நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக இந்த ஆலையை புனரமைப் பதற்கான நிதி ரூபாய் 50 கோடியை முதல்  கட்டமாக உடனடியாக ஒதுக்கி தர வேண்டும்  என்றும், இந்த ஆலையில் வேலை செய்யும்  தொழிலாளர்கள், அலுவலர்கள் மற்றும் விவ சாயிகள் நலனை பாதுகாக்க விரைந்து செயல்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

அவுட்சோர்சிங் முறையை கைவிடுக!

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, பல் லடம், திருமுருகன்பூண்டி உள்ளிட்ட ஆறு நக ராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை உள் ளிட்ட உள்ளாட்சிப் பணிகள் அவுட்சோர் சிங் முறையில் தனியாருக்கு தாரை வார்க்கப் பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே நகராட்சிகளில் ஒப் பந்த அடிப்படையில் தினக்கூலி பணியாளர்க ளாக வேலை செய்து வந்த தூய்மை பணியா ளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோரை தனியார்  ஒப்பந்ததாரர்களிடம் கைமாற்றி விடவும், அவர்கள் தற்போது நடைமுறையில் பெற்று வரும் சம்பளத்தை குறைப்பதற்கும், 50 வய துக்கு மேற்பட்டவர்களை வேலையில் இருந்து நீக்குவதற்கும் ஆங்காங்கே முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு எதிராக உள்ளாட்சி தூய்மை  பணியாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் தங்களுக்கு வேலை மற்றும் சம்பள உத்தர வாதத்தை வலியுறுத்தி போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு, நகர்ப்புற உள்ளாட்சிக ளில் கடை நிலையில் இருக்கும் இந்த தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண் டும். மேலும் தமிழக அரசின் அரசாணைப் படி, தினக்கூலி தூய்மை பணியாளர்களுக் கும், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக் கும் ரூ.610, குடிநீர் பணியாளர்கள் மற்றும்  ஓட்டுநர்களுக்கு ரூ.757 என்று நிர்ணயித்த அடிப்படையில் ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள் ளது.