districts

img

மழைநீர் வெளியேற ராஜ வாய்க்கால் அமைக்கக்கோரி அங்கேரிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக்.1- திருப்பூர் மாநகராட்சி 4 மற்றும் 7ஆவது வார்டு பகுதிகளில் மழை நீர் வெளியேற ராஜ வாய்க்கால் அமைக்க வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. திருப்பூரில் மழை காலங்களில் காந்தி நகர், அவிநாசி கவுண்டம்பாளையம், ஏவிபி ஜெஎஸ் நகர், பாலு இன்னவேஷன், அன்ன பூர்ணா லே அவுட் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெளியேறிச் செல்ல வழியின்றி வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து இப்பகுதி முழுவதும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. எனவே காந்தி நகர் முதல் நல்லாறு வரை ராஜ வாய்க்கால் அமைக்க வேண்டும்.  மேலும், அங்கேரிபாளையம் சாலையில்  தார் சாலை அமைக்கும் பணியை விரைந்து  முடிக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதுடன், இப்பகுதிகளில் பாதாள சாக் கடைக்குத் தோண்டப்பட்ட அனைத்து சாலைகளையும் உடனடியாக சரி செய்ய வேண்டும். அங்கேரிபாளையம் கிழக்கு வீதி யில் 100 ஆண்டுகளாக குடியிருந்து வரும்  குடும்பங்களுக்கு நில வகை மாற்றம் செய்து இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண் டும் என கோரி வெள்ளியன்று அங்கேரிபாளை யம் வரிவசூல் மையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கேரிபாளையம் பகுதி கிளைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  கட்சிக் கிளைச் செயலாளர் கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில் கோரிக்கைகளை விளக்கி ஒன்றிய செயலாளர் கே. பழனிச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.மாரப்பன், ஆர்.காளியப் பன், கிளைச் செயலாளர்கள் எஸ்.ராஜேஷ், மனோகரன், நரேந்திர பிரசாத் மற்றும் பி . ராக்கிமுத்து ஆகியோர் பேசினர். இந்த வார்டு பகுதிகளைச் சேர்ந்த கட்சி அணியினர் திர ளாக கலந்து கொண்டனர்.