திருப்பூர், மே 19- பல்லடம் வட்டம் அனுப்பட்டி கிராமத் தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடியி ருந்து வரும் ஏழை மக்களுக்கு வீட்டுமனை இடம் கேட்டு வட்டாட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக் கப்பட்டது. வியாழனன்று பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாசியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, அனுப்பட்டி கிராமத்தில் ஒரே வீட்டில் இரண்டு குடும் பங்களாக, மூன்று குடும்பங்களாக தொடர்ந்து பல்லாண்டு காலம் வசித்து வரக் கூடிய இந்த மக்கள் விசைத்தறி மற்றும் விவ சாய கூலி வேலைக்கு சென்று வருகிறார் கள். வீடுகளில் இடவசதி இல்லாமல் நெருக் கடி காரணமாக இவர்கள் பெரும் சிரமத் திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு இதே கிராமத் தில் க.சா எண் 304, 305, 306 உள்ளிட்ட காலைக ளில் காலியாக உள்ள இடத்தில் மனையிடம் வழங்கிட வேண்டுமென்று மனு அளிக்கப் பட்டது. இந்நிகழ்வில் அனுப்பட்டி பொது மக்கள் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி சித்ரா, மார்க்சிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றிய செயலாளர் ஆர். பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.