districts

img

பொது மக்கள் சுகாதாரம் காக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

திருப்பூர், நவ. 17 - காங்கேயம் நகரில் மழைக் காலமாக இருப்பதால் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. கொசு மருந்து தெளித்தும், சாக்கடைகளை முறையாக சுத்தம் செய்தும் பொது  சுகாதாரம் காக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் காங்கேயம் தாலுக்கா செயலாளர் (பொறுப்பு) கே.திருவேங்கடசாமி, தாலுக்கா குழு உறுப்பினர்கள் குமாரசாமி, கணேசன் ஆகியோ ருடன்,  மார்க்சிஸ்ட் கட்சியின் நகரக் கிளைச் செயலாளர் ஜெ.ராமநாதன் வியாழக்கிழமை நகராட்சி ஆணையரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,   காங்கேயம் நகராட்சியின் கீழ் செயல்படும் சைக்கிள் ஸ்டேன்டில் ரூ.10 முதல் ரூ.15, ரூ.20 என வசூல் செய்கின்ற னர். இதை உடனே நிறுத்த வேண்டும். தகவல் பலகையில் கட்டண விகிதத்தை எழுதி வைக்க வேண்டும். காங்கேயம் நகரப் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டி  முடிக்கப்பட்ட இலவச சிறுநீர் கழிப்பிடத்தை உடனே திறக்க வேண்டும். இரவு நேரத்தில் விளக்கு வசதி செய்து தர வேண்டும்.

பொது பேருந்து நிலையத்தில் கழிப்பறை, குளியலறை கட்டணம் ரூ.20 முதல் ரூ.30 வரை வசூல் செய்வதையும் தடுத்து  நிறுத்த வேண்டும். தினசரி மார்க்கெட்டில் இரு பக்கமும் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றி சரி செய்ய வேண்டும். குப்பை களை அகற்றி சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். வாரச்சந்தையில் தாறுமாறாக வசூலிக்கப் படும் சுங்கக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் இங்கு கட்டிடப் பணிக்காக ஆழமான குழிகள் வெட்டப் பட்டுள்ளன. போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. சுங்கக் கட்டண விபரத்தை தகவல் பலகையில் மக்களுக்கு தெரியும்படி எழுதி வைக்க வேண்டும். திருப்பூர் சாலையில் காலை நேரத்தில் நூற்றுக்க ணக்கான ஆடுகள் சுற்றித் திரிவதால் விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது குறித்து நகராட்சி நிர்வாகத் திற்கு பல முறை தகவல் தெரிவித்தும் ஒழுங்குபடுத்த நடவ டிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. ஆடுகள் சுற்றித் திரிவதைக் கட்டுப்படுத்திட வேண்டும். நகரப்பகுதியில் மனிதர்கள் இறுதி ஊர்வலம் செல்லும்போது சடலத்தின்  மீதிருக்கும் மாலைகள், உணவுப் பொருட்களை வீதியியில் கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதை தடை செய்ய  வேண்டும்.  குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரத்தை முறைப் படுத்தி பொது மக்கள் சுகாதாரம் காக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.