ஈரோடு மாநகராட்சி 57 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சி.முருகேசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிந்தார். அப்போது, பச்சபாளி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் உள்ளாட்சி தேர்தல் நிதியாக மார்க்சிஸ்ட் கட்சிக்கு ரூ.30 ஆயிரத்தை மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரியிடம் வழங்கினார். உடன், மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மூத்த தலைவர் கே.துரைராஜ் ஆகியோர் உள்ளனர்.