districts

வரி கட்ட தாமதமானால் வட்டி வசூலிப்பதா?

கோவை, செப்.13- சட்டத்தில் இல்லாத வகையில், வரி கட்ட தாமதமானால் வட்டி வசூ லிக்கும் அறிவிப்பை வெளியிட் டுள்ள கோவை மாநகராட்சி நிர்வா கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது, கோவை மாநகராட்சி நிர்வாகம், 12 ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  இதன்படி, 2023-24 நிதியாண்டில், முத லாம் அரையாண்டு, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரி யினங்களையும், செப்.30 ஆம் தேதிக் குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தவில்லை என்றால், அடுத்து வரும் நாட்களில் மாதம் ஒன்றிற்கு  ஒரு சதவீத வட்டியுடன் சேர்த்து கட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள் ளது. மாநகராட்சிக்கு செலுத்த வேண் டிய வரியிணங்களுக்கு, வட்டி வசூ லிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டத்திலும் இதற்கு வழிவகை இல்லை. தமிழ் நாட்டில் எங்கேயும் நடைமுறையில் இல்லாத ஒன்றை கோவை மாநக ராட்சி இங்கே நடைமுறைப்படுத்த முனைவதை மக்கள் ஏற்கமாட்டார் கள். அரசு நலத்திட்டங்கள் இதனால், பின்னுக்கு தள்ளப்படும். வரியினங்கள் முறையாக செலுத்த வேண்டும் என்பது குறித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றத்திலோ, மக்கள் மத்தியிலோ விழிப்புணர்வை  ஏற்படுத்துவதற்கு மாறாக, அரசுத் துறை வட்டி மூலம் வசூலிக்க பொது மக்களை நிர்பந்திப்பது கண்டனத் திற்குரியது. சேவை உணர்வோடு உள் ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை முன்னி ருத்தி, வரியினங்களை வசூலிக்கத் தான் இவ்வளவு காலம் மாநகராட்சி செயல்பட்டது. இந்த நடைமுறையை நிராகரிக்கிற கோவை மாநகராட்சி சுற்றரிக்கையை உடனடியாகத் திரும் பப்பெற வேண்டும் என அதில் தெரி வித்துள்ளார்.