நாமக்கல். ஜன.19- தலித் மாற்றுத்திறனாளி காவல் துறை யினர் விசாரணையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத் தின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றவாளி களை தண்டித்திட வேண்டுமெனக் கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மார்க் சிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.கந்த சாமி தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.முருகேசன் ஆகியோர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்-கிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, சேலம் மாவட்டம், ஓமலூர் கருப்பூரை சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனா ளியான பிரபாகரன் என்பவர் சேந்தமங்கலம் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் அவர் படுகாயம டைந்து உயிரிழந்துள்ளார். இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதை வரவேற்கி றோம். மேலும், காவல் உதவி ஆய்வா ளர்கள் சந்திரன், பூங்கொடி, முதன்மை காவ லர் குழந்தைவேல் ஆகிய காவல் அதிகா ரிகள் தற்காலிக பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.
ஆனால், இது போதுமானது அல்ல. இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வா ளர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டு குற்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும். மேலும், மரணமடைந்த பிரபாகரன் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்ற நிலையில், மரணத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்கிலும் குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும். இதேபோல், பிரபாகரனின் குடும்பத் திற்கு 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண் டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்ட விதி களின்படி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார் பாக சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். இந்த வழக்கை விரைவு நீதி மன்றம் ஒன்றில் விசாரணை நடத்தி சம் பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பத் திற்கு நீதி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள் ளது. ஜன.24-ல் போராட்டம் மேற்கண்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஜன.24 ஆம் தேதியன்று (திங்கட் கிழமை) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎம் சார்பில் கண்டன போராட்டம் நடைபெறும் என மாவட்ட செயலாளர் எஸ். கந்தசாமி தெரிவித்துள்ளார்.