கோவை, மே 11- கோவையில் சொத்து வரி உயர்வை கண்டித்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங் களை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடு பட்டனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் சொத்து வரியை உயர்த் துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித் தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம் பிய சூழலில் சொத்து வரி உயர்வு தொடர்பாக பொதுமக்கள் இம் மாதம் 13-ஆம் தேதி வரை கருத்துக் களை தெரிவிக்கலாம் என்று அறி விக்கப்பட்டது. இந்த சூழலில், சொத்து வரி உயர்வை கண்டித்து புதனன்று கோவை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங் களில் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு கொடுக்கும் இயக்கத்தில் ஈடு பட்டனர். இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி அலுவ லத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் தலைமையில் 200க்கும் மேற்பட் டோர் முற்றுகையிட்டனர். இதன் பின்னர் மாநகராட்சி வருவாய்த் துறை உதவி ஆணையர் செந்தில் குமார் ரத்தினத்தை சந்தித்து சொத் துவரி உயர்வு அறிவிப்பை திரும் பப் பெறக்கோரி தனித்தனியாக மனுக்களை அளித்தனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் சொத்துவரி உயர்வை 5 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை உயர்த்தலாம் என்று மாந கராட்சி முடிவெடுத்துள்ளது. கொரோனா தொற்றால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட் டுள்ள சூழலில் உடனடியாக இந்த சொத்து வரி உயர்வு தேவை யில்லை என்பதே மார்க்சிஸ்ட் கட் சியின் நிலைப்பாடு. தவிர்க்க முடி யாத காரணத்தால் வரி உயர்வு ஏற் படுத்த வேண்டிய சூழல் ஏற்பட் டால் அதிகப்பட்சம் 15 சதவிகிதத் திற்குள்ளாக மட்டுமே உயர்த்த வேண்டும். மாறாக, சொத்துவரியை பலமடங்கு உயர்த்தினால் மக்கள் தாங்கமாட்டார்கள். எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளோம். எதிர்வரும் நிதிக் குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு மக்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். முன்னதாக, இந்த மனு அளிக் கும் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் வி.இராம மூர்த்தி, பூபதி, கண்ணகி, சுமதி உட் பட திரளானோர் கலந்து கொண்ட னர்.
பொள்ளாச்சி
சொத்துவரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொள் ளாச்சி தாலுகாகுழு உறுப்பினர் கே.மகாலிங்கம் தலைமையில் திரண்டு வந்த பொதுமக்கள் பொள்ளாச்சி நகராட்சி அலுவல கத்தில் மனு அளித்தனர். இம்ம னுவை பெற்றுக்கொண்ட பொள் ளாச்சி நகரமன்ற தலைவர் சியா மளா நவநீதகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் எஸ்.தானுமூர்த்தி மற்றும் பொள்ளாச்சி நாடாளு மன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்த ரம் ஆகியோர் இதுதொடர்பாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தனர். முன்னதாக, இம்மனுவை அளிக் கையில் சிபிஎம் பொள்ளாச்சி தாலு காக்குழு உறுப்பினர்கள் கே.ரவி, ஸ்டாலின் பழனிச்சாமி, டி.மகா தேவன், கருப்புச்சாமி, ஜெயப் பிரியா உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
அன்னூர்
அன்னூர் பேரூராட்சி அலுவல ரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரூராட்சி கவுன்சிலர் கள் முகம்மது முசீர், மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் சத்தியராஜ், கபீர், அர்ஜுன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.