districts

img

சூயஸ் குடிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் வரை போராட்டங்கள் தொடரும்

கோவை, ஜன.20-  கோவை மாநகர மக்களின்  குடிநீர் விநியோக ஒப்பந்த உரி மையை சூயஸ் நிறுவனத்திடமி ருந்து ரத்து செய்யும் வரை அதற் கெதிரான போராட்டங்கள் தொட ரும் என மார்க்சிஸ்ட் கட்சி அறி வித்துள்ளது. சூயஸ் ஒப்பந்தத்தை உடனடி யாக ரத்து செய்யக்கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் வி. இராமமூர்த்தி, சி.பத்மநாபன் உள் ளிட்ட தலைவர்கள் கோவை மாநக ராட்சி துணை ஆணையாளரிடம் வியாழனன்று மனு அளித்தனர். இந்த மனுவில் கூறியிருப்பதாவது,  சூயஸ் நிறுவனத்துடனான ஒப் பந்தத்தில் மக்களுக்கு விரோதமான அம்சங்களே நிறைந்துள்ளது. இத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் குடி நீர் கட்டணம், இணைப்பு கட்டணம் ஆகியவை பன்மடங்கு உயரும். எல்லாவற்றிற்கும் மேலாக குடிநீர் விநியோகத்தில் கூட தனியார் கொள்ளை அடிப்பார்கள். ஆகவே,  மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் விநி யோகத்தை சொந்த பொறுப்பில் வழங்கிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பி.ஆர்.நடரா ஜன் எம்.பி., செய்தியாளர்களிடம்  கூறுகையில், கோவை மாநகர மன் றம் தேர்வு செய்யப்படாத காலத் தில், கடந்த அதிமுக அரசில்  அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்த நேரத்தில் கோவை நகரத்தி னுடைய குடிநீர் விநியோகிக்கும் உரிமையை 26 ஆண்டுகால ஒப்பந் தத்திற்கு சூயஸ் என்ற வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட் டது.

இதற்கு அப்போதே அனைத்து பகுதி மக்களும் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். அன்றைய தினம் எதிர்க் கட்சி என்ற முறையில் திராவிட முன் னேற்ற கழகத்தின் தலைமையில் அனைத்து கட்சிகளும் இணைந்து சூயஸ்-க்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்தோம்.  மேலும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மக்களிடத்தில் சூயஸ் நிறுவனத்தினால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைத்தோம். இதன்பின் பல இடங்களில் போராட் டங்களிலும் ஈடுபட்டோம். குறிப் பாக, கோவை நகரத்தின் குடிநீர் விநி யோகம் என்பது அரசினுடைய குடி நீர் வடிகால் வாரியத்தின் மூலமா கவே மேற்கொள்ளப்பட வேண் டுமே தவிர, தனியார் நிறுவனங்க ளால் அல்ல. இந்தியாவில் எந்த  நகரத்திலும் இல்லாத நடைமுறை யாக மக்களின் எதிர்ப்பையும் மீறி கோவையில் அதிமுக அரசு இந்த  ஏற்பாட்டினை செய்துள்ளது. ஆகவே, அதனை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியு றுத்தி வருகிறோம். மேலும், திமுக ஆட்சிக்கு வந் தால் இந்த ஒப்பந்தம் ரத்து செய் யப்படும் என தேர்தல் அறிக்கை யில் உறுதியளித்துள்ளது. தற் போது, திமுக அரசு மக்கள் நல அரசாங்கமாக செயல்பட்டு வருகின் றது என்பதை வரவேற்கிறோம். ஆகவே, மக்களுக்கு விரோதமான சூயஸ் நிறுவன ஒப்பந்தத்தை உட னடியாக ரத்து செய்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில்  கேட்டுக் கொள்கிறோம். அதே நேரம்,  சூயஸ் ஒப்பந்தத்தை ரத்து  செய்யும் வரை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும். இவ்வாறு அவர் கூறினார்.