திருப்பூர், டிச.21- ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றியம் மற்றும் தெற்கு மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் பொறியாளர் அலுவலகங்களில் மனு அளிக் கப்பட்டது. திருப்பூர் வடக்கு ஒன்றியம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் ஒன்றிய அரசு திணிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கேரள இடதுசாரி அரசைப்போல் தமிழக அரசும் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே.மாரப்பன் தலைமையில் வெங்கமேடு உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் வியாழனன்று மனு அளிக்கப்பட்டது. கிளைச் செயலாளர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தெற்கு மாநகரம்: அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெற்கு மாநகரத்திற்கு உட்பட்ட கருவபாளையம், பாரதிநகர் மின் அலுவல கம், ஊத்துக்குளி சாலை மின் அலுவலகம், பெரியாண்டிபாளையம் ஆகிய மின் அலுவ லகங்களில் உள்ள பொறியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்களிடம் மனு அளிக்கப் பட்டுள்ளது. இதில், மாநகர செயலாளர் டி. ஜெயபால் உட்பட பலர் பங்கேற்றனர்.