பென்னாகரம், ஜன.10- பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையை தரம் உயர்த் தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்களன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பென்னா கரத்தில் உள்ள மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை யாக அறிவிக்கப்பட்டு பல வருடங் களாகியும் இதுவரை போதிய மருத் துவர்கள் முழுமையாக பணியில் அமர்த்தப்படவில்லை. எனவே, நிர் ணயிக்கப்பட்ட மருத்துவர்களை உடனடியாக பணியமர்த்த நடவ டிக்கை எடுக்க வேண்டும். பென்னா கரம் அரசு தலைமை மருத்துவ மனையில் இயங்கி வந்த ரத்த வங் கியை உடனடியாக செயல்படுத்த வேண்டும். சிடி ஸ்கேன் 24 மணிநேர மும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கண் சிகிச்சை, டயாலி சிஸ் பிரிவு, தோல் சிகிச்சை, மூளை மற்றும் நரம்பியல் பிரிவு, இதய மருத்துவர் உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பு மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மேலும், பென்னாகரம் வட்டத்தி லுள்ள ஏரியூர், பெரும்பாலை, நாக ரசம்பட்டி, பாப்பாரப்பட்டி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களை படுக்கை வசதியுடன் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வி.மாதன் தலைமை வகித்தார். மூத்த தலைவர் பி.இளம்பரிதி சிறப் புரையாற்றினார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அர்ஜு னன், விசுவநாதன், பென்னாகரம் பகுதி செயலாளர் வி.ரவி, நகர செயலாளர் ஆர்.எழிலரசு, பாப்பா ரப்பட்டி பகுதி செயலாளர் ஆர். சின்னசாமி, சின்னம்பள்ளி பகுதி செயலாளர் சக்திவேல், ஏரியூர் ஒன் றிய செயலாளர் என்.பி.முருகன் உட் பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.