தோழர் கே.பெருமாள் காலமானார் தருமபுரி, ஜூன் 24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காரிமங்கலம் வட் டக்குழு உறுப்பினரும், தமிழ் நாடு விவசாயிகள் சங்க வட்ட செயலாளருமான தோழர் கே.பெருமாள் வியாழ னன்று காலமானார். தருமபுரி மாவட்டம், காரி மங்கலம் வட்டம், நாகனம் பட்டியைச் சேர்ந்தவர் தோழர் கே.பெருமாள் (65). இவர் 40 ஆண்டு காலத்திற்கு மேலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத் துக்கொண்டு பணியாற்றி வந்தார். கட்சியின் வட்டக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வட்ட செயலாளராகவும் திறம்பட பணியாற்றினார். மக்க ளின் அடிப்படை பிரச்சனைகளுக்காவும் போராடிய தோழர் கே.பெருமாள் வியாழனன்று காலமானார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். மாரிமுத்து, எம்.முத்து, எஸ்.கிரைஸாமேரி, மாவட்டக் குழு உறுப்பினர் டி.மாதையன், வட்ட செயலாளர் பி.ஜெய ராமன் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இதன்பின் நாகனம்பட்டியில் இரங்கல் கூட்டம் நடை பெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.