திருப்பூர், மார்ச் 14- எல்லா விஷயங்களிலும் பொய் பேசி மக்க ளின் அடிப்படை வாழ்வாதார பிரச்சனை களை திசை திருப்பும் பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய அரசை வரும் நாடாளுமன்றத் தேர்த லில் வீழ்த்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் உறுதியேற்றனர். இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவராக மக்கள் பணியாற்றி ஆதிக்க சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த கே. ரத்தினசாமி 2002 ஆம் ஆண்டு கோரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது 22 ஆம் ஆண்டு நினைவு தினம் இடுவாய் கிரா மத்தில் நடைபெற்றது. புதனன்று இடுவாய் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பிருந்து துவங்கிய ஊர்வலம் அந்த கிராமத்தின் முக் கிய வீதிகள் வழியாக சென்று தியாகி ரத்தின சாமி நினைவிடத்தை அடைந்தது. அங்கு கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் செங்கொடி ஏற்றி வைத்து தியாகி ரத்தினசாமி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினார். இதைத்தொடர்ந்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. உன்னி கிருஷ்ணன், தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேசன் உள் பட திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிக ளில் இருந்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர், இடுவாய் ஊராட்சியைச் சேர்ந்த பொது மக்கள், தியாகி இரத்தினசாமியின் குடும்பத் தார் அணிவகுத்து வந்து மலர் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து இடுவாய் மைதா னத்தில் தியாகி ரத்தினசாமி நினைவஞ்சலி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இடுவாய் கிளைச் செயலாளர் கே.கருப்பசாமி தலை மையில் ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணே சன் வரவேற்றார். இந்நிகழ்வில் மாதர் சங்க தெற்கு ஒன்றி யத் தலைவர் பா.லட்சுமி, மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. உன்னிகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், கட்சியின் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்டோர் உரை யாற்றினர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளருமான ஜெயசீலன் பங்கேற்று தியாகி ரத்தினசாமி நினைவு தினச் சிறப்புரையாற்றினார். இதில், பேசிய தலைவர்கள் கடந்த 10 ஆண்டு காலம் இந்தியாவை ஆட்சி செய்த பாரதிய ஜனதா அரசு பல்வேறு விதமான பொய்களைச் சொல்லி, மக்களை ஏமாற்றியதையும் அதை திசை திருப்புவதற்காக, மத வெறியை தூண்டி விடுவதையும் அம்பலப்படுத்தி பேசினர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவை இந்திய மக்கள் படு தோல்வி அடையச் செய்வார்கள் என்றும் கூறி னார். முன்னதாக கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, தெற்கு ஒன்றியப் பகு தியில் மக்களிடம் வசூலிக்கப்பட்ட கட்சி வளர்ச்சி நிதி ரூ.5 லட்சத்து 6 ஆயிரத்து 860-ஐ ஜெயசீலனிடம் ஒப்படைத்தார். இக்கூட்டத் தின் நிறைவாக இடுவாய் கிளை உறுப்பினர் ஜி.பழனிச்சாமி நன்றி கூறினார்.