திருப்பூர், நவ.24- திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயிலில் வெள்ளியன்று இந்து சமய அற நிலையத் துறையின் சார்பில் 2 இணையர்களுக்கு திரும ணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருமண நிகழ்ச்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை யேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி சீர்வரிசை பொருட்கள் வழங்கினார். மொத்தம் ரூ.50 ஆயிரம் மதிப்பீட் டில் 15 வகையான பொருள்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சி யில், சுப்பிரமணியசுவாமி கோயில் உதவி ஆணையர் அன் னக்கொடி, கண்காணிப்பாளர் பால்ராஜ், துறை சார்ந்த அலுவ லர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.