கோவை, மே 30- கோவை மத்திய சிறையின் சிறைக்காவ லர் மீது பெண் கொடுத்த புகாரின் பேரில் பந்தய சாலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். கோவை சூலூரை சேர்ந்த 29 வயது இளம்பெண் ஒருவர் பந்தயசாலை போலீ சில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, கோவையில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரி யில் பேராசிரியராக வேலை பார்த்து வருகி றேன். எனது தந்தை கோவை மத்திய சிறை சாலையில் உதவி ஜெயிலராக வேலை பார்த்து வருவதால் ஜெயில் வளாகத்தில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்தேன். அப்போது ஜெயிலில் காவல ரான ரவிக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதன்பின் ரவிக்குமார் என்னி டம் திருமண ஆசை வார்த்தை கூறி பாலி யல் ரீதியாக வன்கொடுமை செய்தார். இதன் பின் ரவிக்குமார் திருப்பூருக்கு மாறுத லாகி சென்ற நிலையில், கடந்த மார்ச் 28 ஆம் தேதி பொள்ளாச்சியில் கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண் டார். இச்சூழலில், வேறொரு திருமணம் செய்ய ரவிக்குமார் ஆயத்தமாகி வந்த நிலை யில், அதுதொடர்பாக தான் முறையிட்ட போது ரவிக்குமார் மற்றும் அவரது குடும்பத் தார் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வரு வதாக அப்பெண் புகார் அளித்திருந்தார், இந்த புகாரின் அடிப்படையில் காவலர் ரவிக் குமார் மற்றும் அவரது பெற்றோர் மீது கொலை முயற்சி, பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பந்தய சாலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.