கோவை, ஆக.20- கோவையில் நடைபெற்ற “ரன் பார் வீல்ஸ்” மாரத்தான் போட்டியில், ஏராளமான மாற்றுத்திறனாளிகள் வீல் சேருடன் கலந்து கொண்டனர். கோவையில் மாற்றுத்திறனாளிகளின் திறன்களை ஊக்கு விக்கும் வகையில், “ரன் பார் வீல்” எனும் மாரத்தான் போட்டி கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கங்கா முதுகுத்தண்டு வட முறிவு மறுவாழ்வு மைய வளாகத்தில் நடைபெற்றது. சிற் றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை இணைந்து நடத்திய இப்போட்டியில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளி லும் இருந்தும் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். விளையாட்டு பற்றிய விழிப்புணர்வை அனைத்து தரப்பினரிடையே கொண்டு சேர்க் கும் வகையில் நடைபெற்ற இப்போட்டியில், மாற்றுத்திறனா ளிகள் மட்டுமின்றி பொதுமக்களும் கலந்து கொண்டனர். முன்னதாக, மாரத்தான் போட்டிகளை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் துவக்கி வைத்தனர். 3, 5, 10 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் மாற்றுத்திற னாளிகள் உட்பட ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். மாரத்தான் போட்டியின் முடிவில், தமிழ்நாடு சக் கர நாற்காலி கூடைப்பந்து அணியின் முன்னணி வீரர்கள் கலந்து கொண்ட சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டி பார் வையாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.