districts

img

அரூரில் மரக்கா நூல் வெளியீட்டு விழா

தருமபுரி, அக்.24- அரூரில் நடைபெற்ற மரக்கா நூல் வெளி யீட்டு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் மற்றும் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை இணைந்து மரக்கா நாவல் வெளியீட்டு விழா அரூர் அம்பேத்கர் அறக் கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு தமுஎகச மாவட்டத் தலைவர் எ.கொ.அம்பேத்கர் தலைமை வகித்தார். கவி ஞர் ஆதிமுதல்வன் எழுதிய மரக்கா நாவலை தமுஎகச மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சன்யா நூலை வெளியிட்டு பேசினார்.  இதில் விடுதலை கலை இலக்கிய பேரவை  மாநில பொதுச்செயலாளர் யாழன் ஆதி, கவி ஞர் நவகவி, எழுத்தாளர் சாமிக்கண்ணு, தக டூர் புத்தக பேரவை ஒருங்கிணைப்பாளர் ஆசி ரியர் தங்கமணி, தமுஎகச மாநிலக்குழு உறுப் பினர் மேட்டூர் வசந்தி, மாவட்டச் செயலாளர் மா.சிங்கரவேல் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.