districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

நாமக்கல், ஜன.27- பள்ளிபாளையத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிக ளுக்கான மருத்துவ முகாமில், ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் - திருச்செங்கோடு  சாலை பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில், மாவட்ட  மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சனியன்று நடைபெற் றது. இம்முகாமில் எலும்பு முறிவு சிகிச்சை, மனநலம் பாதிக் கப்பட்டோருக்கான சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை, கண்  உள்ளிட்ட பரிசோதனைகள் சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உயர் சிகிச்சை தேவைப் படுவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து 59 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை, 54 மாற்றுத்திறனாளிகளுக்கு புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டை, 40 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல மைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை, 16  மாற்றுத்திறனாளிகளுக்கு உயர் பாதுகாப்பு பராமரிப்பு உத வித்தொகை, 16 மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த்துறை சார்பில் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான உதவித்தொகை, 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் அடையாள அட்டை, 5 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி என மொத் தம் ரூ.65 ஆயிரத்து 350 மதிப்பிலான நலத்திட்ட உதவி களை மாவட்ட ஆட்சியர் ச.உமா வழங்கினார். இந்த முகா மின் மூலமாக ஏராளமானோர் பயனடைந்தனர்.