ஒரு சாமானியனாக கேட்டுக்கொள்கிறேன்...
ரேகசெளந்தர் - மாணவர்
நம் நாட்டில் உள்ள வாக்கு அரசியலில் பல கட்சிகள் பல் வேறு விஷயங்களில் அரசியல் செய்த போதிலும் ராணுவம் மற்றும் சுகாதாரத்தில் நேரடியாக எந்தவொரு கட்சியும் அரசியல் செய்ய வில்லை. ஆனால் தற்போது அக்னிபாத் என்ற திட்டத்தின் மூலம் அரசு ராணுவத்தில் அரசியல் தளம் அமைத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் ராணுவ வீரர்கள் நான்கு வருடங்கள் மட்டுமே பணியாற்ற முடியும். இதற்கு காரண மாக அரசு கூறுவது இதன் மூலம் ராணுவத்திற்கு செய்யப்படும் செல வில் மிச்சப்படும். அப்படி பாதுகாப்பில் சமரசம் செய்து மிச்சம் செய்யப்படும் பணத்தை அரசு என்ன செய்ய திட்டம் வைத்திருக் கிறது. இத்திட்டத்தில் அரசியல் இருப்பதாக கூறியதற்கு காரணம், இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கடுப்படும் சிலர் 4 வருடங்க ளுக்கு பிறகு டீடெயின் செய்யபட வாய்ப்பிருகிறது. அப்படியென் றால் தேர்வு முறை வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். அது சாத்தியமா? ஏன் நீட் என்று வட மாநிலங்களில் எத்தனை இடங்களில் வினாத்தாள்கள் வெளியாயின. அப்படி இருக்குபட் சத்தில் தங்கள் அரசியலை நிலைநிறுத்த ஏதுவாக உள்ளவர்களை டீடெயின் செய்வார்கள். இந்நிய ராணுவ உலக ராணுவங்களில் முதல் 4 இடத்தில் உள்ளது. இதனை சீர்குலைக்கிறார்கள் வருத்த மாக உள்ளது.
-கீர்த்திகா சிவக்குமார் (மாணவி)
கட்டிடம் கட்ட காண்ட்ராக்ட்-க்கு ஆள் எடுத்து பாத்திருப் போம். ஆனால், நாட்டை காக்க வேண்டிய மிகவும் நம்பகத் தன்மை வாய்ந்த ஒரு ராணுவ வீர னையே காண்ட்ராக்ட்டில் வேல பாக்கணும்--னு சொல்ற அதிசயத்தை இப்போ தான் பாக்குறேன். இளைஞர் களின் ராணுவ கனவை நெருப்பிட்டு கொளுத்துவதற்கு இணையான செயல் என்பதால்தான் இந்த திட்டத்திற்கு “அக்னி”பத் திட்டம் என பெயர் வைர் தார்களோ என்னவோ. ஒரு வேலை நாட்டை காப்பாத்ததான் நிரந்தர பணியில்ராமர் இருக்கார்னு நினைத்திருப்பார்களோ...?
நவீன் - செய்தி நிறுவனத்தில் வேலை செய்பவர்
அக்னிபாத் திட்டம் இந்திய ராணுவத்தின் ஒட்டுமொத்த கொள்கைகளையும் சீர்குலைக்கும் அபாயகரமான திட்டமாகும். இத்திட்டத்திற்கான தகுதி வயது என 17 வயதை நிர்ணயித்துள்ள தால் மாணவர்களின் உயர்கல்வி நோக்கத்தை சிதைக்கும் வகை யில் திட்டம் உள்ளது. இந்திய ராணுவ வீரர்களின் சலுகை களையும், உரிமைகளையும் வெறும் நான்கு ஆண்டுகளுக் குள்ளாகவே சுறுக்கும் வகையில் இந்த திட்டம் உள்ளதால் இது இந்திய ராணுவ வீரர்களின் தியாகங்களை அவமதிக்கும் ஒரு திட்டமாகும். ஆகவே, ஒன்றிய அரசு இதுபோன்ற கேலிக் கூத்தான திட்டங்களை கைவிட்டுவிட்டு, உயிரை துச்சமென நினைத்து இந்திய நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களை மரியாதையாக நடத்த வேண்டும் என ஒரு சாமானியனாக கேட்டுக்கொள்கிறேன்.
தோ.டால்டன்
தோ.டால்டன் 17.5 முதல் 26 வயதுக்குட்பட்டவர்களை குறி வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ராணு வப்பணித் திட்டம் தான் அக்னிபாத் திட்டம். 6 மாத கால பயிற்சியும் மூன்றரை ஆண்டுக் காலப் பணிக்குப்பின் எவ்வித வாழ்வாதார பாதுகாப்பும் ஓய்வூதியமும் இல்லாமல் அந்த ராணுவ வீரர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். அவர்கள் இதர பணிகளில் அமர்த்தப்படுவார்கள் என்பது அரசாங்கத்தின் பதிலாக இருக்கி றது. இத்திட்டத்தினால் இந்திய இராணுவத்தின் சராசரி வயது குறையும் என்றும் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரிக்கும் என்றும் ஓய்வூதியம் வழங்கும் செலவு மிச்சமாகும் என்றும் பலக் காரணங்களை அரசாங்கம் கூறினாலும்¸ ஒரு சராசரி இந்திய குடிமகளுக்கு இது மிகப்பெரிய தீங்காகவும். நம் இந்திய நாட்டின் மக்களில் பெரும்பாலனோர் இன்றளவும் வறுமைக் கோட்டிற்கு கீழ்தான் வாழ்ந்து வருகின்றனர்.
கொரோனா பாதிப்பின் காரணமாக நடுத்தர வர்க்கத்து மக்கள் பலரும் கூட வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். ஏழை குடும்பங்கள் பலவற் றுக்கும் ராணுவப்பணி தான் தீர்வாகவும் சமூகத்தில் மதிப்புடன் வாழ வழியாகவும் இருக்கிறது. எப்படியாவது ராணுவத்தில் சேர்ந்து விட்டால் போதும்¸ தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்றி விட லாம் என்னும் நோக்கத்தில் தான் பல இளைஞர்கள் ராணு வத்தில் இணைகின்றனர். அவர்களின் ஆசை மற்றும் கனவைத் தகர்ப்பதாகத் தான் அக்னிபாத் திட்டம் திகழ்கிறது. நாட்டில் பணக்காரர்கள் இராணுவத் தில் இணைபவர்கள் சொற்ப அளவே. அப்படியே இணையும் சிலரும் இராணுவ குடும்பத்தில் வந்தவர்களாகத்தான் இருக்கி றார்கள். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. என்னதான் ‘நாடு¸ நாட்டுப்பற்று” என்று பேசினா லும்¸ இராணுவத்தில் இணையும் பலருக்கும் அது மாத ஊதியம் பெற்றுத்தரும்¸ தன் குடும்பத்தைக் காப்பாற்றும் ஒரு வேலைவாய்ப்பு தான். அக்னிபாத் திட்டம் அந்த வேலைவாய்ப்பை¸ அவர் களின் நம்பிக்கையை சீர்குலைப்பதாக இருக்கிறது. இந்த ‘அக்னிபாத்” திட்டத்தை இராணுவத்தில் செயல்படுத்து வதை விட¸ இந்தியா அரசாங்கத்தை நடத்திச் செல்லும் அரசு பதவிகளில்¸ குறிப்பாக ‘குடியரசுத் தலைவர்¸ பிரதமர்¸ அமைச்சர் கள்” ஆகியவற்றில் செயல்படுத்தினால்¸ ஒன்றிய அரசுக்கும்¸ இந் திய நாட்டிற்கும் நன்மையாக அமைந்திடும், என்றார்.
-தொகுப்பு: ஸ்ருதி