அவிநாசி ஜூன் 21- கால்நடை தீவனங்கள் விலை உயர்வை சமாளிப்பதற்கு பசும்பால் மற்றும் எருமைப் பால் விலைகளை உயர்த்தி வழங்க வேண் டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியா ளர்கள் சங்கத்தினர் கோரியுள்ளனர். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத் தின் திருப்பூர் மாவட்ட பேரவை கூட்டம் செவ் வாயன்று அவிநாசி பி.ராமமூர்த்தி நினைவ கத்தில் நடைபெற்றது. போத்தம்பாளையம் எஸ்.வேலுச்சாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசா யிகள் சங்க அவிநாசி ஒன்றிய தலைவர் ஏ. முத்துரத்தினம் வரவேற்றார். பால் கூட்டுறவு சங்க தலைவர்கள் போத் தம்பாளையம் எம்.சின்னச்சாமி, பள்ளத் தோட்டம் ஆர்.முருகசாமி, சேடர்பாளையம் துணைத் தலைவர் எஸ்.கே.பழனிசாமி, இயக்குநர்கள் பள்ளத்தோட்டம் கே.சுப் பிரமணி, த.வி.ச. ஊத்துக்குளி தலைவர் எஸ்.கோபாலகிருஷ்ணன், அவிநாசி துணை தலைவர் பி.பழனிசாமி, கமிட்டி உறுப்பினர் பி.குமாரசாமி ஆகியோர் முன் னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், அவிநாசி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரும், தமிழ்நாடு விசைத் தறி தொழிலாளர் சம்மேளன மாநில தலை வர் பி.முத்துசாமி வாழ்த்துரை வழங்கி னார்.
மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே. கொளந்தசாமி வேலையறிக்கையை முன் மொழிந்து பேசினார். தீர்மானங்களை முன் மொழிந்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.பரமசிவம் பேசினார். பால் உற்பத் தியாளர்களுக்கு கொள்முதல் விலை 2019 ஆம் ஆண்டுக்குப் பின்பு உயர்த்தப்பட வில்லை, இன்றைய நிலையில் தவிடு, புண் ணாக்கு, பருத்திக் கொட்டை, கலப்புத் தீவ னம் உள்ளிட்ட இடுபொருள்கள் கடுமை யான விலை உயர்ந்த நிலையிலும், சோளத் தட்டை மற்றும் பசுந்தீவனம் உற்பத்தி செல வுகள் அதிகரித்துள்ள நிலையில் பசும் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ 42ம், எருமைப் பாலுக்கு ரூ.51ம் உடனடியாக தமிழக அரசு கொள்முதல் விலை உயர்த்தி வழங்க வேண்டும். பால் கூட்டுறவு சங்கங்களுக்கு காலமுறைப்படி கால்நடை மருத்துவர்கள் வருவதில்லை. ஆவின் நிர்வாகம் போது மான மருத்துவர்களை நியமிக்கவில்லை. இதனால் கால்நடைகளுக்கு நோய் தாக்குத லுக்கு உள்ளாகும் போது தனியார் மருத்து வர்களை நாடி அதிக தொகை செலவழிக்க வேண்டியுள்ளது.
ஆகவே, போதுமான கால்நடை மருத்துவர்கள் நியமித்து முறை யாக வாரந்தோறும் சங்கங்களுக்கு வருகை தந்து சிகிச்சை அளிப்பதை உத்தரவாதப் படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு பால் விற்பனை விலை நுகர்வோருக்கு குறைத்ததால் ஏற்பட்ட இழப்பு ரூ.270 கோடியை உடனடியாக கூட்டு றவு சங்கங்களுக்கு வழங்கி சங்கங்கள் நலி விலிருந்து காப்பாற்ற வேண்டும். திருப் பூர் மாவட்ட ஆவின் ஒன்றியத்திற்கு தேவை யான உட்கட்டமைப்பு வசதிகளை உடன டியாக போதுமான நிலம், நிதி ஒதுக்கி அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில், மாவட்ட தலைவராக எஸ்.கே.கொளந்தசாமி, செயலாளராக எஸ்.வேலுச்சாமி, பொருளாளராக எஸ். பரமசிவம், துணை தலைவராக பி.குமா ரசாமி, துணை செயலாளராக ஆர்.சுப்பிர மணி உட்பட 11 பேர் கொண்ட கமிட்டி ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து மாநில தலைவர் ஏ.எம்.முனுசாமி சிறப்புரையாற்றி னார். ஊத்துக்குளி சங்க செயலாளர் ஆர்.சுப் பிரமணி நன்றி தெரிவித்தார்.