தருமபுரி, ஜூலை 21- மணிப்பூர் மாநிலப் பெண்கள் இருவரை நிர்வாணப்படுத்தி ஊர் வலமாக அழைத்து சென்ற குரூ ரத்தை கண்டித்தும், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும் சமூக நல்லி ணக்க மேடை (தமிழக மக்கள் ஒற்றுமை மேடை) சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு வெள்ளியன்று கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நல்லிணக் மேடையின் ஒருங்கிணைப்பாளர் பொ.மு.நந்தன் தலைமை வகித் தார். இதில், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.ராதிகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளர் அ. குமார், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பி.தீர்த்தராமன், மாவட்ட துணைத் தலைவர் சங்கர், தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ், அருட்தந்தையர் சூசை ராஜ், மரியப்பன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இரா.சிசு பாலன், மனிதநேய மக்கள் கட்சி யின் மாநில பிரதிநிதி சாதிக் பாட்ஷா, மாவட்டத் தலைவர் சுபேதார், சிஎஸ்ஐ செயலாளர் ஜேக்கப் லிவிங்ஸ்டன், டியூக் பொன்ராஜ், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் கோவிந்த ராஜ், பகுத்தறிவாளர் கழக மாநிலச் செயலாளர் ஊமை ஜெயராமன், மக்கள் கண்காணிப்பகம் செந்தில் ராஜா, தேசிய லீக் சிக்கந்தர், முஸ்லீம் லீக் நிஜாமுதீன், விடு தலை சிறுத்தைகள் கட்சியின் கோட்டை மு.கலைவாணன், ஆதித் தமிழன், குண்டு சக்தி உள்ளிட்ட பலர் திரளானோர் கலந்து கொண் டனர்.