பொள்ளாச்சி, ஏப்.16- பத்து ஆண்டில் மோடி அரசு விவசாயத்திற்காக என்ன செய்தது? என்று கேட் டால், விவசாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு டெல்லிக்கு சென்ற விவசாயிகளை ஆணி படுக்கை கொண்டு வரவேற்பு அளித்தது தான் மோடி அரசு என மக்கள் நீதி மய்யம் ஒருங்கிணைப்பாளர் கமல்ஹாசன் தெரிவித்தார். இந்தியா கூட்டணியில் பொள்ளாச்சி மக்க ளவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டி யிடும் கே.ஈஸ்வரசாமியை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சா ரம் செய்தார். அப்போது, வாக்காளர் மத்தியில் பேசிய கமல்ஹாசன், 60 வருடங்களாக பொள்ளாச் சிக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழகத்தில் மொத்தம் நான்கு கோடி தென்னை மரங்கள் உள்ளன. அதிலும், பொள்ளாச்சியில் இரண்டு கோடி தென்னை மரங்கள் உள்ளன. விவசாயிகளுக்கு நல வாரியம், உழவர் சந்தை, விவசாயிகளுக்கு ரூ.7000 கோடி விவசாய கடன் தள்ளுபடி போன்ற வற்றை செய்தவர் நமது முத்தமிழறிஞர் கலை ஞர். இப்படி விவசாயிகளுக்காக செய்வது தான் திராவிட மாடல். அதுமட்டுமின்றி, இலவச மின்சாரம், விவ சாயத்திற்கு தனி பட்ஜெட், 2 லட்சம் மின் இணைப்பு போன்றவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். பத்து ஆண்டில் மத்திய அரசு விவசாயத்திற்காக என்ன செய் தது? என்று கேட்டால், விவசாய பயிர்க ளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு டெல்லிக்கு சென்ற விவசாயிகளை ஆணி படுக்கை கொண்டு வரவேற்பு அளித்தது தான் மோடி அரசு செய்தது. எனவே எந்த அரசு வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நல்லதை நினைத்து உதயசூரியனுக்கே வாக்களியுங்கள். பொள் ளாச்சி வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு வாக்க ளியுங்கள் என்றார். இப்பிரச்சாரத்தின் போது, பொள்ளாச்சி நகரச் செயலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.