districts

மாண்டஸ் புயல்: ஏற்காட்டில் சூறாவளி காற்று மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

சேலம், டிச.11- மாண்டஸ் புயல் காரண மாக ஏற்காட்டில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய் தது. மரங்கள் சாய்ந்ததால்  போக்குவரத்து பாதிக்கப் பட்டது. சேலம் மாவட்டம், ஏற் காடு சுற்றுலா தலமாக உள் ளது. கடல் மட்டத்திலிருந்து ஆயிரத்து 500 மீட்டர் உய ரத்தில் உள்ள ஏற்காடு, ஏழை களின் ஊட்டி என்று அழைக் கப்பட்டு, சுற்றுலா பயணிகள் மகிழும் இட மாக விளங்கி வருகிறது. தற்போது மாண்டஸ் புயலின் காரணமாக ஏற்காடு பகுதிகளில் கடுங்குளிர் மற்றும் மழை பெய்து வருகிறது. சூறாவளி காற்றின் காரணமாக மின்கம்பங் கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள் ளது. மேலும், ஏற்காடு மலை பாதைகளில் மிகப்பெரிய மரங்கள் சாய்ந்துள்ளதால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. ஏற்காடு மலைப் பாதையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மின்சாரம் கம் பங்கள் சரி செய்யப்பட்டு வருகிறது. கடுங் குளிரின் காரணமாக ஏற்காடு பகுதி பொது மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.