தருமபுரி, அக்.11- பிக்கிலி ஊராட்சியில் இலவச வீடு வழங்கும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பென்னா கரம் வட்டம், பிக்கிலி ஊராட்சியில் நடைபெறும் நூறுநாள் வேலைத்திட் டத்தில் நிதி முறைகேடு ஏற்பட்டுள் ளது. மேலும், நூறுநாள் வேலைத் திட்ட பெண் தொழிலாளர்களை கண் ணியக்குறைவாக நடத்துவது, பிர தமர் இலவச வீடு திட்டத்தில் பயனா ளிகளிடம் லஞ்சம் பெற்று முறைகேட் டில் ஈடுபடுவது, வெட்டாத பண்ணைக் குட்டைக்கு பணம் எடுத்தது உள்ளிட் டவை குறித்து விசாரணை நடத்தி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, அங்கன் வாடி கட்டடம், வெள்ளத்தால் சேத மடைந்த ஆற்றுப்பாலத்தை சீர மைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொல்லப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் டி.ஆர்.சின்னசாமி தலைமை வகித்தார். ஒன்றிய கவுன் சிலர் ராதிகா அன்பரசு முன்னிலை வகித்தார். இதில் கட்சியின் மாவட் டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசுவநா தன், பகுதிக்குழு செயலாளர் ஆர். சின்னசாமி, பகுதிக்குழு உறுப்பி னர்கள் சின்னராஜ், சிலம்பரசன், செல் வராஜ், வேலாயுதம், முன்னாள் ஒன் றிய கவுன்சிலர் காமராஜ் உட்பட அப் பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில், சண்முகம் நன்றி கூறினார்.