தருமபுரி, ஜன.3- ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தரும புரி அரசு கலைக்கல்லூரியில் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடை யிலான ஆடவர் ஆணழகன் போட்டி தருமபுரி அரசு கலைக்கல் லூரி புதிய கலையரங்கில் நடைபெற்றது. துவக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் கோ.கண்ணன் தலைமை வகித்தார். உடற் கல்வி இயக்குநர் கு.பாலமுருகன் வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போட்டிகளை துவக்கி வைத்தார். சேலம் பெரியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் கே.வெங்க டாசலம், பல்கலைக்கழக ஆண்கள் விளையாட்டு ஒருங் கிணைப்பாளர் ஆர்.சுரேஷ் குமார் ஆகியோர் வாழ்த்தி பேசி னர். இதைத்தொடர்ந்து 8 வகையான எடை பிரிவுகளில் நடை பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், தகுதி சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி கௌர விக்கப்பட்டது. இப்போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி யின் உடற்கல்வி இயக்குநர் பாலமுருகன் செய்திருந்தார். இப்போட்டிகளில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 18 கல்லூரிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.