பக்தர்கள் போல் வேடமணிந்து திருட்டு?
நாமக்கல், டிச.25- தனியார் ஜவுளி கடையில் பக்தர்கள் போல வேட மிட்டு வந்த மூன்று நபர்கள், சுமார் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பி லான ஜவுளிகளை நூதன முறையில் திருடி சென்ற சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் தனியார் காகித ஆலைக்கு செல்லும் சாலையில், தனியார் ஜவுளி கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் உரிமையாளர் செந்தில்குமார், ஜவுளி மொத்த வியாபாரம் மற்றும் பாத்தி ரங்கள், பெட்சீட்டுகள் உள்ளிட்ட பல்வகையான பொருட் களை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கடைக்கு வந்த, மூன்று பக் தர்கள் சுமார் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஜவுளி களை வாங்கியுள்ளனர். தொடர்ந்து, ஜவுளிகளை வாங்கிய தற்கான பணத்தை கையில் கொடுப்பதற்கு பதிலாக கடை உரிமையாளரின் கூகுள்பே எண்ணிற்கு பணத்தை அனுப்பி விடுவதாக கூறி, அவரிடம் மொபைல் எண்ணை கேட்டுள் ளனர். கடை உரிமையாளரும் என்னை தந்துவிட்டு வேலை களை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது, பணம் அனுப் பியது போன்ற ஒரு குறுஞ்செய்தியை அந்த நபர்கள் காட்டி விட்டு அங்கிருந்து பொருளை வாங்கிக்கொண்டு சென்ற தாக கூறப்படுகிறது. சிறிது நேரத்திற்கு பிறகு தனது அக்க வுண்டில் பணம் வராததை கண்டு அதிர்ச்சி அடைந்த, கடை யின் உரிமையாளர் செந்தில்குமார், அந்த நபர்கள் வந்து சென்ற வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள் ளார். தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. பக்தர்கள் போல் வந்தவர்கள் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஜவுளிகளை நூதனமாக திருடி சென்றுள் ளது. பள்ளிபாளையம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
இயல்பை மறந்த மலபார் அணில்கள்
உதகை,டிச.25- அடர்ந்த வனப்பகுதியில் உயரமான மரங்களில் மட் டுமே வாழக்கூடிய மலபார் அணில்கள், தனது இயல் பான குணத்தை மறந்து குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சாலை யோர பழ வியாபாரியிடம் வந்து தினமும் பழங்களை தின்று செல்வது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா சாலை ஓரத் தில் பழக்கடை ஒருவர் நடத்தி வருகிறார். இவரின் கடைக்கு தினம்தோறும் மலபார் அணிகள் வந்து செல்கின்றது. கடந்த ஆண்டுகளில் ஒரு அணில் மட்டுமே வந்த நிலையில் தற் போது நான்கு அணில்கள் தினம்தோறும் வந்து பழங் களை சாப்பிட்டு செல்வது சுற்றுலா பயணிகளை ஈர்த்துள் ளது. ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பல்வேறு பழ மரங்கள் நீல கிரி மாவட்ட மலைப்பகுதியில் இருந்தாலும், காலையி லும், மாலையிலும் இங்கு வந்து பழங்களை சாப்பிடு வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இதை சுற்றுலா பயணி கள் ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுத்துச் செல்கின்றனர். மனிதர்களை கண்டாலே அதிவேகமாக ஓடி மரங்களில் மறைய கூடிய இந்த அணில்கள், நூற்றுக்கணக்கான மக்கள் நடமாடும் பகுதியில் சர்வசாதாரணமாக வந்து செல்கிறது. சாதாரண அணில்களைக் காட்டிலும் மலை அணில்கள் உருவத்தில் பெரியதாக இருக்கும். இந்த அணில்களின் உடல் ஒரு அடியும், வால் ஒன்றரை அடி நீளமும், எடை ஐந்து கிலோ வரை இருக்கும் அடர்ந்த காட்டுப் பகுதி யில் உயரமான மரங்களில் மட்டுமே இந்த அணில்களைக் காண முடியும். இந்த அணில்கள் மரங்களை விட்டு இறங்குவது மிக அரிதாக இருக்கும் என சொல்லப்ப டுகிறது. ஆனால், தனது இயல்பை மறந்து பழக்கடைக்கு வந்து வியாபாரி கொடுக்கும் பழத்தை தின்று ருசித்துவிட்டு செல்கிற காட்சி அனைவரையும் வியப்படையச்செய்கிறது.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
சேலம், டிச. 25- வனவாசி அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் மாவட்டம், வனவாசி அருகே அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், 1973 -74 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 50 ஆம் ஆண்டு பொன்விழா சங்கமமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன் னாள் மாணவர்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், இப்பள்ளியில் 1973ஆம் ஆண்டு கற்பித்த ஆசிரியர்கள் பொம்மண்ணன், கண்ணன், பாலசுப்பிரமணி யம், நெல்லையப்பர், சுந்தர்ராஜன், சரோஜா, ராஜாராம் உள் ளிட்டோருக்கு பொன்னாடை போற்றி மரியாதை செய்யப்பட் டது. இறுதியில், முன்னாள் மாணவ மாணவிகள் சார்பில் பள் ளிக்கு நன்கொடையாக டேபிள், பெஞ்ச் ஆகியவை வழங் கப்பட்டன.
கூட்டுறவுச் சங்க காலியிடங்களுக்கான தேர்வு
தருமபுரி, டிச.25- கூட்டுறவுச் சங்கங்களில் உதவியாளர் பணியிடங்க ளுக்கான எழுத்துத் தேர்வை தருமபுரியில் 881 எழுதினர். தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவா ளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலி யாக உள்ள 28 உதவியாளா் பணியிடங்களை நேரடி நியம னம் மூலம் நிரப்ப தருமபுரி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத் தால் எழுத்துத் தேர்வு ஞாயிறன்று நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத மொத்தம் 1,102 பேருக்கு தேர்வுக்கூட அனு மதிசீட்டு வழங்கப்பட்டிருந்தது. தருமபுரியில் பல்வேறு மையங்களில் நடைபெற்ற எழுத்துத் தேர்வை 881 பேர் பங் கேற்று எழுதினர். தோ்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தார்.
உயரமான தார்ச்சாலை: விபத்து ஏற்படும் அபாயம்
உதகை, டிச.25- பந்தலூர் அருகை சீரமைக்கப்பட்ட தார்ச்சாலை உயர மாக இருப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூரில் இருந்து பாட்டவயல் மற்றும் கேரளா மாநிலம் வயநாடு பகுதிக்கு செல்லும் சாலை யில், தற்போது நெல்லியாளம் முதல் பொன்னானி சிமிர்னா ஹோம் வரை தார்சாலை புதுப்பிக்கப்பட்டது. இந்த சாலையில் ஏற்கனவே அகலம் குறைவாக உள்ளதால் எதி ரில் வரும் வாகனங்கள் செல்வதே சாகசம் நடத்துவது போல் உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த சாலையில் மேலும் தார் போடப்பட்டு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சாலையின் உயரம் அதிகரித்துள்ளது. இதனால், இரு சக்கர வாகனங்கள் சாலையின் ஓரங்களில் செல்ல முடியா மலும், சில நேரங்களில் சறுக்கியும் விழுகின்றனர். புதிய சாலை அமைக்கும் போது, ஏற்கனவே உள்ள சாலையை முழுவதுமாக அகற்றிவிட்டுத்தான் புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஒப்பந்ததாரர்களோ, பழைய சாலையை பெயர்த்து எடுத்து புதிய சாலை போடுவதென்றால், அதிகப்படியான கட்டுமான பொருட்கள் செலவாகும் என்பதால், ஏற்க னவே உள்ள சாலையின் மீது தார் ஊற்றி ரோலர் எந்திரத்தை உருட்டி சாலை போடப்பட்டதாக கணக்கு காட்டி வருகின்ற னர். ஏற்கனவே உள்ள சாலையின் மீது மேலும், மேலும், சாலையை போடப்போட அதன் உயரம் அதிகரித்து விபத்து ஏற்படும் என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து வருவது குறிப்பி டத்தக்கது.
தெருவிளக்கு அமைக்க வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
சேலம், டிச.25- ஆத்தூர் அருகே ராமநாயக்கன் பாளையம் முதல் அய்யங் கரடு வரை தெரு விளக்கு அமைத்து தரக்கோரி அப்ப குதி மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நூதனப் போராட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட இராம நாயக்கன்பாளையம் சந்தைப்பேட்டை முதல் அய்யங்கரடு வரை உள்ள சாலையை பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பிரதான சாலையாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையின் வழியாக செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் இரவு நேரங்களில் செல்லும்போது, அப்பகுதியில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் மின்விளக்கு வசதி இல்லா மல் இருண்டு உள்ளது. இதனால், இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது, இந்த சாலையில் மின்சார விளக்குகள் அமைக்க கோரி பலமுறை பஞ்சாயத்து அலுவலகத்தில் கோரிக்கை வைத்தும் எந்தவிதமான நடவ டிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இப்பகு தியில் தெருவிளக்கு அமைத்து தரவேண்டும். அதிகாரிகள் எங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லையென்றால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிரந்தரமான பேரூராட்சி செயல் அலுவலர் நியமிக்க கோரி கோரிக்கை
அவிநாசி,டிச.25- அவிநாசி பேரூராட்சியில் நிரந்தரமாக பேரூராட்சி செயல் அலுவலர் நியமிக்கக் கோரி சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத் துள்ளார். இதுகுறித்து அவிநாசி நல்லது நண்பர் அறக்கட்டளையை சேர்ந்த ரவிக்குமார் கூறுகையில், அவிநாசி பேரூராட்சியில் 18 வார்டுகள் செயல்பட்டு வருகின்றனர். இதில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளான சாக்கடை வசதி, குடிநீர் வசதி, கட்டிடப் பணிகள் உள்ளிட்டவைகளை தீர்க்கக்கோரி பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், அவினாசி பேரூராட்சியில் இரண்டு வருடங்களாக நிரந்தர மான பேரூராட்சி செயல் அலுவலர் இல்லாததால் பல்வேறு பணிகள் பாதித்து வருகிறது. மேலும், கட்டிடப் பொறியாளர் நிரந்தரமாக இருப்பினும் மாதத்தில் சில நாட்கள் மட்டுமே பணிக்கு வருகின்றனர். இதன் காரணமாக அவிநாசி வளர்ச்சிப் பணிகள் பாதித்து வருகின்றது. அவிநாசி பழைய பேருந்து நிலையத்தில் ஆறு கோடி மதிப்பிலான அடுக்குமாடி வணிக வளாக கட்டிடமும் மெதுவாக நடந்து வருகிறது. இதனை கருத் தில் கொண்டு நிரந்தரமான பேரூராட்சி செயலாளர் நியமிக்க கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மாட்டுத்தீவனத்தில் கலப்படம்: ஆய்வு செய்ய விவசாயிகள் கோரிக்கை
உடுமலை, டிச.25- உடுமலை பகுதியில் தனியார் நிறுவனங் களில் இருந்து வாங்கும் தீவனங்களைக் கால் நடைகளுக்குக் கொடுத்தால், பாதிப்புக்குள் ளாவதாக விவசாயிகள் தெரிவித்து உள்ள னர். உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலூகா பகுதிகளில் விவசாயிகளின் பிர தான தொழிலாக கால்நடை வளர்ப்பு உள் ளது. தமிழக அரசின் கூட்டுறவுச் சங்கத் தின் பால் நிறுவனமான ஆவினுக்கு விவசாயி கள் பால் விற்பனை செய்து வந்தனர். பின்நாட் களில் இப்பகுதியில் பல தனியார் பால் கொள் முதல் நிறுவனங்கள் கவர்ச்சியான சலுகை கள் அளித்ததால், அதாவது வங்கி கடன், இல வச மாட்டுத்தீவனம் உள்ளிட்டவைகள் தந்த தால், அரசின் ஆவின் பால் கொள்முதல் நிலையங்கள் பெயர் அளவிற்கு மட்டுமே செயல்பட்டு வருகிறது. தற்போது, தனியார் நிறுவனங்கள் வழங்கிய மாட்டுத்தீவனங் களைக் கால்நடைகளுக்கு தருவதால் பல மாடுகள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி வரு கிறது என விவசாயிகள் புகார் அளித்துள்ள னர். மேலும், கால்நடைத் துறை அதிகாரிகள் கால்நடைகளுக்கு தரப்படும் தீவனங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
நாளை மக்களுடன் முதல்வர் முகாம்
திருப்பூர், டிச.25- காங்கயம் நகராட்சிக்குட்பட்ட வாா்டு எண் 13,14,15,16,17, 18 ஆகிய பகுதிகளுக்கான ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம் காங்கயம் நகரம், கரூர் சாலையில் உள்ள சிவாலயா மண்டபத்தில் புதன்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில், பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அனைத்து அசல் ஆவணங்கள், நகல்களை கொண்டுவர வேண்டும். மேலும், தங்களது கோரிக்கை களை துறைவாரியாக தனித்தனி மனுக்களாக எழுதி சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கி தீர்வு பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குட்டியுடன் காட்டுயானைகள் முகாம்
உதகை, டிச.25 கொலக்கொம்பை சிஎஸ்ஐ பள்ளி அருகே குட்டியுடன் காட்டுயானைகள் முகாமிட்டிருந்தது. இதனையடுத்து, வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உதகை மாவட்டத்தில் இருந்து கோவைக்கு செல்ல மூன்றாவது வழித்தடமாக மஞ்சூர் -கெத்தை சாலை உள்ளது. அடர்ந்த வனப்பகுதி என்பதால் யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்நிலையில் குட்டியுடன் யானை கூட்டம் ஒன்று மஞ்சூர் கெத்தை வனப்பகுதியில் முகாமிட்டிருந்து. அவை அவ்வப் போது சாலையில் உலா வருகின்றன. திங்களன்று காலை கொலக்கொம்பை CSI பள்ளி அருகே சாலையில் யானை கூட்டம் உலா வந்துள்ளது. நீண்ட நேரம் சாலையில் நின்ற பின்னர் வாகனத்தை பார்த்தவுடன் யானைகள் வனப்ப குதிக்குள் சென்றது. யானைகள் தொடர்ந்து சாலையில் உலா வரும் என்பதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டி கள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என்று வனத்து றையினர் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டுத் துப்பாக்கியுடன் சிக்கிய இருவர் கைது
சேலம், டிச.25- நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த இரண்டு பேர் சேலத்தில் கைது செய்யப்பட்டனர். சேலம் மாநகர் இரும்பாலை காவல் நிலையத்திற்குட் பட்ட, மோகன் நகர் பகுதியில் காவல் நிலைய உதவி ஆய்வா ளர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கை ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த இருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், அவர்க ளிடம் நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் இருப்பது தெரி யவந்தது. இதைத்தொடர்ந்து, அவைகளை பறிமுதல் செய்த போலீசார், சிவதாபுரம் பகுதியைச் சேர்ந்த சிவா மற்றும் தினேஷ்குமார் ஆகியோரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கஞ்சா விற்ற ஐந்து பேர் கைது
கோவை, டிச. 25- ஆனைமலை அடுத்த அம்பராம்பாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தம்பதியினர் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, இவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாவட்டத்தில் ஆனைமலை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத் தது. இதனையடுத்து, ஆனைமலை அடுத்த அம்பராம்பா ளையம் அருகே போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அப்பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. இதில் அன்னக்கொடி(42) மற்றும் அவரது மனைவி லட்சுமி (34) என்பவரையும் கைது செய்த னர். காவல் துறை விசாரணையில் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் (35), கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகம் (36) மற்றும் கோவை பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் உட்பட ஐந்து பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் 4.100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
காட்டெருமை தாக்கி விவசாயி படுகாயம்
உதகை, டிச. 25- நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த தாய் சோலை தன மஞ்சோடை பகுதியை சேர்ந்தவர் சிக்கண்ணன் (54) இவ ருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். இவர் அந்தப் பகுதியில் சொந்தமாக தேயிலை தோட்டம் வைத்து விவ சாயம் செய்து வருகிறார். இந்நிலையில், திங்களன்று தேயிலை தோட்டம் ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வளைவான இடத்தில் இவர் சென்றபோது எதிர்பாராத விதமாக புத ருக்குள் இருந்து வெளியே வந்த காட்டெருமை இவரை பின் பக்கமாக வந்து முட்டி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த சிக்கண்ணன் சத்தம் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டெருமையை விரட்டி விட்டனர். மேலும் சிக்கண் ணனை மீட்டு சிகிச்சைக்காக மஞ்சூர் அரசு மருத்து வமனையில் அனுமதித்தனர். பின்னர், அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.