கோவை, டிச.16- கல்வியை வர்த்தகப் பொருளாக்கி, எளி யவர்களுக்கு எட்டாக்கனியாக்குவது தேசத் தின் எதிர்காலத்துக்கு ஏற்படவிருக்கும் பெரும் ஆபத்தாக உள்ளதாக, கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றஞ்சாட்டினார். தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரி யர் கழகத்தின் 20 ஆவது மாநில மாநாடு கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி அரங்கில் சனியன்று நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் கே.சுந்தர்ராஜன் வர வேற்றார். மாநிலத் தலைவர் வை.சுவாமி நாதன் வரவேற்றார். பொதுச்செயலாளர் ஆ. மனோகரன் மாநாட்டுத் தலைப்பை அறிமுகம் செய்தார். கல்லூரிக் கல்வி இயக்குநர் (பொ) கோ.கீதா, மண்டல இணை இயக்குநர் வெ. கலைச்செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங் கினர். நிகழ்ச்சியில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலா ளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு கருத்தரங் கச் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகை யில், இந்தியாவில் பிரதமரை விட, குடியரசுத் தலைவரை விட உயர்வானது அதிகாரமிக் கது அரசியலமைப்புச் சட்டமாகும். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்களாக நியமிக்கப் படுபவர்கள் அந்த அரசியலமைப்புச் சட்டத் தின்படி நடந்து கொள்வேன் என்று உறுதி யேற்கின்றனர். ஆனால், பல்கலைக்கழகத் தின் வேந்தராக இருக்கக் கூடிய தமிழக ஆளு நர் ஆர்.என்.ரவி, அரசியலமைப்புச் சட் டத்தை சற்றும் மதிக்காதவராக,
அதற்கு சவால் விடுக்கும்படியாக தொடர்ந்து நடந்து வருகிறார். கல்வி, சுகாதாரத்தை தனியார் மயமாக் கவும் அதற்கான நிதியுதவியைக் குறைக்க வேண்டும் என்றும் நீதி ஆயோக் மத்திய அர சுக்கு தொடர்ந்து பரிந்துரைத்து வருகிறது. அந்தத் திட்டத்தை செயல்படுத்தும் விதமா கவே பள்ளிக் கல்விக்கும், உயர் கல்விக்கும் ஒதுக்கும் நிதியை ஒன்றிய அரசு தொடர்ந்து குறைத்து வருகிறது. ஒற்றைப் பண்பாட்டு தேசத்தை உருவாக்குவதற்காக ஒன்றிய அரசு திட்டமிட்டு கல்வித் திட்டத்தை அழிக் கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியா கவே கல்விக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக் கப்படுவதும், ஆசிரியர், பணியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்பாமல் விடப்படுவதும் நடக்கிறது. புதிய கல்விக் கொள்கையானது எழுத்தறிவு, எண்ணறிவு, வேலைத்திறன் என உயர் கல்வியை சுருக்குவதாகவும், வளாகம் இல்லாத கல்வி முறையை கொண்டு வர ஊக்குவிப்பதாகவும் உள்ளது. எனவேதான் இதற்கு முந்தைய எந்த கல்விக் கொள்கையின் போதும் எழாத எதிர்ப்புக்குரல் நாடு முழுவ தும் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து 2020 தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக எழுந்திருக்கிறது. கல்வியை வர்த்தகப் பொரு ளாக்கி, எளியவர்களுக்கு எட்டாக்கனியாக்கு வது தேசத்தின் எதிர்காலத்துக்கு ஏற்படவி ருக்கும் ஆபத்தாகும். இந்த ஆபத்தில் இருந்து மக்களையும் மாணவர்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஓய்வு பெற்ற ஆசிரி யர் சமுதாயத்துக்கும் உள்ளது, என்றார். மாநாட்டில், பேராசிரியர்களுக்கு இடையே வும், ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு இடை யேவும் நிலவக் கூடிய ஊதியம், ஓய்வூதிய முரண்பாடுகளை களைய வேண்டும். ஒத்திசைவுப்பட்டியலை அமல்படுத்த வேண் டும். மருத்துவக் காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளைக் களைய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இவ்விழாவில், முன்னாள் துணை வேந்தர்கள் வெ.மா.முத்துக்குமார், சி.சுப்பிர மணியம், ஆசிரியர் கழக நிர்வாகிகள் பெ. மாது, ரோகிணி தேவி, ம.ராஜகோபால் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.