கோவை ஜூன் 26- எழுத்துரிமை, கருத்துரிமைகளை நசுக்கும் சக்திகளுக்கு எதிராக சட்டங் களை இயற்றி வலுப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் 15 ஆவது கோவை மாவட்ட மாநாடு ஞாயிறன்று கோவை புலியகுளத்திலுள்ள கருப்பு கருணா நினைவரங்கத்தில் நடைபெற் றது. முன்னதாக மாநாட்டின் துவக்க நிகழ்வாக இந்தி திணிப்பு - நீட் தேர் வுக்கு எதிரான மத நல்லிணக்க கையெ ழுத்துப் பதாகையை எழுத்தாளர் சி. ஆர்.ரவீந்திரன் துவக்கி வைத்தார். தப் பாட்ட நிகழ்வை புலவர் சாந்தாமணி தொடங்கி வைத்தார். இம்மாநாற் டிற்கு மாவட்ட தலைவர் தி.மணி தலைமை தாங்கினார். செ.விவேகா னந்தன் வரவேற்றார். மாநாட்டில் மேடைக்கலைவாணர் நன்மாறன், கருப்பு கருணா. கோவை எஸ்.ராமகிருஷ்ணண் ஆகிய படங்கள் திறக்கப்பட்டது.
இதனை முறையே ப.மயில்சாமி. ம.திருமூர்த்தி, டி.சுரேஷ் குமார் ஆகியோர் திறந்து வைத்த னர். மாநாட்டை துவக்கிவைத்து திரை இயக்குநரும், திரைப்பட பாடலாசிரிய ருமான ஏகாதசி உரையாற்றினார். இதில், கலை இலக்கியப் பெருமன் றத்தின் மாவட்டச் செயலாளர் ப.பா.ரமணி வாழ்த்துரை வழங்கினார். இதனையடுத்து படைப்பாளுமை களைச் சிறப்பித்தல் நிகழ்வில், தமி ழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்ற புலவர் செந்தலை ந. கௌதமன் மற்றும் 2018- 22 ஆம் ஆண்டு காலத்தில் நூல்கள் வெளியிட் டுள்ள கோவை மாவட்டப் படைப்பா ளர்கள் 60 க்கும் மேற்பட்டோர் சிறப் பிக்கப்பட்டனர். இம்மாநாட்டில், கோவையின் மையப்பகுதியில் பாரதியார் சிலை அமைக்க வேண்டும். கோவை நீதி மன்ற வளாகத்தில் அம்பேத்கர் அம் பேத்கர் சிலை அமைக்க வேண்டும். குறும்படம் திரையிடல், நாடகங்கள், நூல் வெளியீட்டு விழா ஆகியவற் றிற்கு குறைந்த அளவில் கலையரங் கம் அமைக்க வேண்டும். பள்ளி, கல் லூரி மாணவ மாணவிகளுக்கு தொல் லியல் மற்றும் கல்வெட்டு தொடர்பான பயிற்சி அளிக்க வேண்டும். கருத் துரிமை போராளிகளான ஆனந்த் டெல் டும்டே மற்றும் சீசா செசல்வாட் ஆகி யோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத்தொடர்ந்து மாநாட்டு வேலையறிக்கையை அ.கரீம், பன் பாட்டு அறிக்கையை கவிஞர் மீ.உமா மகேஷ்வரி, வரவு செலவு அறிக் கையை பொருளாளர் ஜென்னீஸ் ஆகியோர் முன்வைத்தனர்.
புதிய நிர்வாகிகள் தேர்வு
மாநாட்டில் தமுஎகச மாவட்ட தலைவராக தி.மணி, செயலாளராக அ.கரீம், பொருளாளராக, த.அருள் மணி, துணைத்தலைவராக மீ.உமா மகேஸ்வரி, துணை செயலாளராக மு.ஆனந்தன், பானுமதி மற்றும் வீர மணி உள்ளிட்ட 11 பேர் கொண்ட செயற்குழு, 31 பேர் கொண்ட மாவட்ட குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து தமு எகச மாநில தலைவர் (பொ) கவிஞர் மதுக்கூர் சி.ராமலிங்கம் உரையாற்றி னார். இதனைத்தொடர்ந்து பெரியார் நகர் பகுதியில் கலைவிழா நடைபெற் றது. இதில் பல்வேறு கலைநிகழ்ச்சி கள் நடைபெற்றது.
நாமக்கல்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட மாநாடு திருச்செங்கோடு கொங்கு வேளாளர் சமுதாய கூடத்தில் எஸ்.சரவணன், ஆர்.மாதவி ஆகி யோர் தலைமையில் நடைபெற்றது. மறைந்த எழுத்தாளர்கள் என்.நன்மா றன், கு.சின்னப்பபாரதி. கருப்புகருனா உள்ளிட்ட தலைவர்களின் திருவு ருவப்படத்தை சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட் சண்யா திறந்து வைத்து, சிறப்புரை யாற்றினார். எம்.நித்தியானந்தன் வர வேற்புரையாற்றினார். மாநாட்டை துவக்கி வைத்து மாநிலக்குழு உறுப் பினர் மேட்டூர் வசந்தி உரையாற்றி னார். வழக்கறிஞர் எஸ்.சேகரன் வேலை யறிக்கையும், வழக்கறிஞர் ஜி.கோபி கலை இலக்கிய அறிக்கையும் முன் வைத்தனர். விநாயகா பள்ளி தாளாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் வாழ்த்துரை யாற்றினார். இம்மாநாட்டில், புகைப்பட கலை ஞர்களுக்கு தொழில் தொடங்க நிபந் தனை விதித்து கடன் வழங்க வேண் டும். எழுத்துரிமை, கருத்துரிமையை நசுக்கும் சக்திகளுக்கு எதிரான சட் டத்தை வலுப்படுத்தி இயற்ற வேண் டும். உலக புகழ்பெற்ற எழுத்தாளர்கள் சுபாவின் அனைத்து நூல்களையும் அரசுடமையாக்க வேண்டும். தெருக் கூத்து கலைஞர்களுக்கு மாத ஓய்வூதி யமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். வேலையில்லா காலத்தில் மாத நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன
புதிய நிர்வாகிகள் தேர்வு'
இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாவட்ட தலைவராக எஸ்.சரவணன், மாவட்ட செயலாளராக எஸ்.சேக ரன், மாவட்ட பொருளாளராக ஆர். ரமேஷ், துணைத்தலைவராக ஜி. கோபி, துணைச்செயலாளராக ஆர். மாதவி உட்பட மாவட்ட செயற்குழு மற்றும் 21 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. நிறை வாக, கே.சி.ராமச்சந்திரன் நன்றி கூறி னார்.
திருப்பூர்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 15 ஆவது மாநாடு ஞாயிறன்று யுனிவர்சல் ராஜகோபால் நினைவு அரங்கில் நடைபெற்றது. மாநாட்டு நிகழ்வுகளை நொய்யல் பண்பாட்டு அமைப்பின் தலைவர் மு.ஜீவானந் தம் பறையிசை அடித்து தொடக்கி வைத்தார். தோழர்கள் நன்மாறன், கருப்பு கருணா நினைவு நுழைவா யில் பகுதியில் சங்க கொடியை மாநில செயற்குழு உறுப்பினர் இரா.ஈஸ்வரன் ஏற்றி வைத்தார். இதில், மாநில செயற் குழு உறுப்பினர் ம.மணிமாறன், கலை இலக்கிய பெருமன்ற தலைவர் பி.ஆர். நடராசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாவட்ட தலைவராக பி.ஆர்.கணே சன், மாவட்ட செயலாளராக ஆர். குமார், மாவட்ட பொருளாளராக என். ராமசாமி, மாவட்ட துணைத்தலைவர் களாக மா.நாட்டராயன், செ.நடேசன், இ.அங்குலட்சுமி, மாவட்ட துணைச் செயலாளர்களாக வேலா.இளங்கோ, தோழன் ராஜா, ஜெயலட்சுமி உட்பட 8 பேர் கொண்ட செயற்குழு, 41 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய் யப்பட்டது. மாநில துணை பொதுச் செயலாளர் அ.லட்சுமிகாந்தன் மாநாட்டை நிறைவு செய்து பேசி னார். இதன் நிறைவாக வெள்ளியங் காடு நால்ரோடு, எழுத்தாளர் கு.சின் னப்பபாரதி நினைவு திடலில் கலை இரவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஈரோடு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்க ஈரோடு மாவட்ட 8 ஆவது மாநாடு திண்டல் சீமா சமூக மேம்பாட்டு மையத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் நடைபெற்றது. மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக சூழ லியல் காப்போம் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் தி.தங்க வேல் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் இ.கலைக்கோ வன் வரவேற்றார். மண் பயனுற வேண் டும் என்ற தலைப்பில் சூழலியல் அறி ஞர் நக்கீரன், பூமி இழந்திடேல் என்ற தலைப்பில் சூழலியல் அறிஞர் கோவை சதாசிவம், பறவைகள் பலவிதம் என்ற தலைப்பில் முன்னாள் தலைமை ஆசி ரியர் க.பரமசிவன், புற்றீசலாய் பெரு கும் புற்றுநோய் என்ற தலைப்பில் அருட்தந்தை சு.புஷ்பநாதன் ஆகி யோர் கருத்துரையாற்றினர். பேச் சுப்போட்டி மற்றும் ஓவிய போட்டி களில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட் டன. முன்னதாக ஓவியக்கண்காட் சியை மு.சுந்தரன், கவிதை கண்காட் சியை க.மோகனரங்கன், புத்தக கண் காட்சியை வே.சங்கர், புகைப்பட கண் காட்சியை கி.சிதம்பரன் ஆகியோர் திறந்து வைத்தனர். முதல் நாள் அமர்வின் இறுதியாக மாவட்ட செயலாளர் மு.சங்கரன் நன்றி கூறினார். இதனைத்தொடர்ந்து கலை விழா நடைபெற்றது. இதில் கலை நிகழ்ச்சிகள், நாடகம், உரை வீச்சு மற்றும் பண்டைய இசைக்கருவிகள் அறிமுகமும் நடைபெற்றது. ஞாயிறன்று பிரதிநிதிகள் மாநாடு மாவட்ட தலைவர் ந.சின்னையன், மாவட்ட துணை தலைவர் இரா.முரு கேசன், பேரா.மு.சர்மிளா தேவி ஆகி யோர் தலைமையில் நடைபெற்றது. கதை சொல்லி சரிதா ஜோ வரவேற் றார். மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் நிறைமதி துவக்கவுரையாற்றி னார். தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்ற மாவட்ட செயலாளர் செ.கார்த்தி கேயன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் செ.கார்த்திகே யன் ஆகியோர் வாழ்த்துரை வழங் கினர். மாநில செயற்குழு உறுப்பினர் திரைப்பட பாடலாசியரியருமான ஏகா தசி நிறைவுரையாற்றினார். அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைக்கு மாறான காவல் துறை யின் செயல்பாட்டை கண்டித்து மாநாட் டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதிய நிர்வாகிகள்
மாநாட்டில் தலைவராக மு.சங்க ரன், செயலாளர் இ.கலைக்கோவன், பொருளாளர் கி.கணேசன், செயற் குழு உறுப்பினர்களாக 11 பேர், மாவட் டக்குழுவிற்கு 31 பேர் தேர்வு செய்யப் பட்டனர்.