கோவை, நவ. 20- தருமபுரியில் பிடிக்கப்பட்டு, வால் பாறை அடர் வனப்பகுதியில் விடப்பட் டிருந்த மக்னா யானை இறந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட் டங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தியதாகவும், மக் களை அச்சுறுத்தியதாக மக்னா யானையை வனத்துறையினர், மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர், இதனை ஆனைமலை புலிகள் காப்பகம் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட மந்திரி மட்டம் பகுதியில் விடு வித்தனர். அதாவது சின்னக்கல்லார் பகுதியில் மக்னாய் யானையை இறக்கி, அதன் பின்னர் வனத்துறை காலர் ஐ.டி. பொருத்தப்பட்டு கண்காணித்து வந்த னர். இதனைத்தொடர்ந்து மக்னா யானை, டாப்சிலிப் வழியாக சரளபதி பகுதியில் உள்ள விளைநிலத்தில் புகுந்து, கரும்பு, தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது. இத னையடுத்து, வனத்துறையினர் மீண் டும் மயக்க ஊசி செலுத்தி பிடித் தனர். மீண்டும் வால்பாறை உள்ள சின்னக்கல்லார் பகுதியில் இறக்கிவிடப் பட்டது. சுமார் ஒரு மாத காலமாக சின்னக்கல்லார், ரயான், சின்கோனா, சிறுகுன்றா, பச்சைமலை உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டிருந்தது. மக்னா யானையை வனத்துறை யினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நாகமலை வனப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட, மங்கிபால்ஸ் பகுதியில், வனத்துறை ரோந்து பணி யில் ஈடுபட்ட போது யானை ஒன்று இறந்த நிலையில் கண்டனர். அது மக்னா யானை என்பதை உறுதி செய்த வனத்துறையினர் உயர் அதிகாரிக ளுக்கு தகவல் தெரிவித்தனர். மூன்று முறை மயக்க ஊசி செலுத் தியதால் மக்னா யானை பலவீனம டைந்து இறந்துள்ளதாக சமூக ஆர்வ லர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.