சிவகாசி: ஏழைக் குழந்தைகள் கற்கும் பள்ளியில் வணிக வளாகம் கட்ட சிபிஎம் ஆட்சேபணை
சிவகாசி, மே 12- சிவகாசியில் ஏழை, எளிய மாணவர்கள் படித்து வரும் பள்ளியில் மாநகராட்சி சார்பில் வணிக வளாகம் கட்டுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சேபணை தெரிவித் துள்ளது. சிவகாசியில் கருத்தறியும் கூட்டம் மாந கராட்சி மேயர் சங்கீதா இன்பம் தலைமை யில் நடைபெற்றது. அதில், அண்ணாமலை நாடார் உண்ணாமலையம்மாள் பள்ளி வளாகத்தில் மாநகராட்சி சார்பில் வணிக வளாகம் கட்டுவதற்கும், விஸ்வத்தம் பகுதி யில் மாநகராட்சி பிரதான அலுவலக கட்டி டம் கட்டுவதற்குமான ஆலோசனைகளை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.முருகன், நகர் செயலாளர் ஆர்.சுரேஷ்குமார், முன்னாள் சிபிஎம் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜே. லாசர், பி.பால்ராஜா, முகமது இஸ்மாயில் உள்ளிட்டோர், ஆட்சேபணை மனுவை மேயரிடம் வழங்கினார். அதில் கூறியதாவது, அண்ணாமலை நாடார்-உண்ணாமலை அம்மாள் பள்ளியில் சாதாரண ஏழை, எளிய மக்களின் குழந்தை கள் படித்து வருகின்றனர். எனவே, அவர்களது நலன் கருதி இங்கு வணிக வளாகம் கட்டுவதற்கு ஆட்சேபணை தெரி விக்கிறோம். மேலும், 15 வருடங்களுக்கு முன்பு விஸ்வத்தம் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மட்டன் மார்க்கெட் கட்டப் பட்டது. அது தற்போது வரை பயன்படுத் தப்படவில்லை. இதனால், நகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, திரு வில்லிபுத்தூர் சாலையில் புதிய நகராட்சி கட்டிடம் உள்ளது. எனவே, மட்டன் மார்க்கெட் பகுதியில் புதிய மாநகராட்சி கட்டி டம் தேவை இல்லை. அவ்வாறு கட்டப் பட்டால் பொது மக்களின் வரிப்பணம் வீண டிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 17 கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
விருதுநகர், மே 12- விருதுநகர் மாவட்டத்தில் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட் டம் வரும் மே 17 அன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.மேக நாதரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில், அருப்புக் கோட்டை, சாத்தூர், சிவகாசியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலு வலகங்களில் வரும் மே 17 அன்று காலை 11 மணிக்கு விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, விவசாயிகள் அதில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை களை நேரடியாக மனு மூலம் தெரி வித்து பயன் பெறலாம் என தெரிவித் துள்ளார்.
தடை செய்யப்பட்ட 24 கிலோ புகையிலை பறிமுதல்: 2 பேர் கைது
அருப்புக்கோட்டை, மே 12- அருப்புக்கோட்டை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட் களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கொம்பையா தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, பெத்தம்மாள் கோவில் அருகே உள்ள கடையில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சட்டவிரோ தமாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கடை உரிமையாளர் சுப்பிரமணி(49), முத்து முருகன்(35) ஆகிய இருவரை போலீ சார் கைது செய்தனர். மேலும், அவர் களிடம் இருந்து சுமார் 24 கிலோ எடையுள்ள ரூ. 10 ஆயிரம் மதிப்பு டைய புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
தேனி மாவட்ட வி.தொ.ச. புதிய நிர்வாகிகள் தேர்வு
தேனி, மே 12- அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கத்தின் தேனி மாவட்டக் குழு விற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் தேனி மாவட்ட பேரவை வியாழனன்று மாவட்ட தலை வர் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணா மலை முன்னிலை வகித்தார். கூட்டத் தில் மாநிலத் தலைவர் ஏ.லாசர் கலந்து கொண்டார் . கூட்டத்தில் மாவட்டத் தலைவ ராக எல்.ஆர்.சங்கரசுப்பு, செய லாளராக சி.வேலவன், மாவட்ட பொருளாளராக கே.தயாளன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கண்மாய்களில் இலவச மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
தேனி, மே 12- பொதுப்பணித்துறை ,ஊரக வளர்ச்சித் துறை கட்டுப் பாட்டில் உள்ள குளம் ,கண்மாய்களில் மண் ,கிராவல் இலவசமாக எடுத்துக்கொள்ள விவசாயிகள் விண்ணப் பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேனி மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகியவற்றின் கட்டுப் பாட்டில் உள்ள அரசு புறம்போக்கு குளம் மற்றும் கண்மாய்களில் விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் மண், சவுடு மற்றும் கிராவல் இலவசமாக வழங்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நஞ்சையாக இருந்தால் ஏக்கருக்கு 75 கனமீட்டர் (ஒரு ஹெக்டேருக்கு 185 கனமீட்டர்), புஞ்சையாக இருந்தால் ஏக்கருக்கு 90 கன மீட்டர் (ஒரு ஹெக்டேருக்கு 222 கன மீட்டர்), மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தேவைப்படும் களிமண் 60 கன மீட்டர், மற்ற தேவைகளுக்கு அகற்றப்படும் மண், சவுடு, கிராவல் ஆகியவை 30 கனமீட்டருக்கு மிகாமல் எடுத்துக் கொள்ளலாம். 20 நாட்களுக்கு மிகாமல் அனுமதி பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் ,சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ், மற்றும் பட்டா, சிட்டா கிராம ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு செய்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.
கலசலிங்கம் கல்லூரி 28 மாணவர்கள் பணிக்கு தேர்வு
திருவில்லிபுத்தூர்,மே 12- திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பார்மஸி கல்லூரியில் பெங்களூர், மைலான் லேபரட்டரி நிறுவனம்,பி.பார்ம்,டி.பார்ம்,இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வளாக நேர்காணல் கல்லூரி இயக்குநர் எஸ்.சசி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் என்.வெங்கடேஷ் வரவேற்றார். நிறுவன அதிகாரிகள் நேர்காணல் நடத்தி,28 மாணவர்களை தேர்வு, செய்தனர்.
கட்டணம் முறைகேடு புகார் மாணவர்கள் போராட்டத்தால் உசிலம்பட்டி கல்லூரி முதல்வர் மாற்றம்
மதுரை, மே 12- மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராம லிங்க தேவர் கல்லூரியில் பொறுப்பு முதல்வராக இருந்த ஒ.ரவி மாணவ மாணவிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதைக் கண்டித்து மாணவ,மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் முதல்வர் ஒ.ரவி மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக முனைவர் ஜோதிராஜன் புதிய பொறுப்பு முதல்வராக பதவி வகிப்பார் என மதுரை மண்டல கல்லூ ரிக்கல்வி இணை இயக்குனர் பொன்.முத்துராமலிங்கம் அறிவித்துள்ளார். முனைவர் ஜோதிராஜன், இக்கல்லூரியில் பொருளியல் துறை இணை பேராசிரியராக பணியாற்றி வரு வதோடு, மாற்றப்பட்ட முதல்வர் ஒ.ரவிக்கு முன்பு பொறுப்பு முதல்வராக ஜோதிராஜன் பணியாற்றினார் என்பது குறிப்பி டத்தக்கது.