districts

img

எம்.ராஜேந்திரன் நினைவேந்தல் கூட்டம்

தருமபுரி, நவ. 4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் எம்.ராஜேந் திரன் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினை வேந்தல் கூட்டம் தடங்கம் கிராமத்தில் நடை பெற்றது. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளராகவும், சிஐடியு தொழிற் சங்க தலைவராக செயல்பட்டவர் தோழர் எம்.ராஜேந்திரன். விவசாயிகள் சங்கம், தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்து வர்க்க  வெகுஜன அமைப்புகளை வளர்த்துவதில் முன்னிலையில் நின்றவர்.  தோழர் எம்.ராஜேந்த்திரன் 5 ஆம் ஆண்டு  நினைவுதினததையெட்டி, தடங்கம் கிராமத் தில் உள்ள அவரது நினைவிடத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாலை  வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் நடைபெற்ற நினைவேந்தல் கூட் டத்திற்கு, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.சின்னராஜ், தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்து மூத்த தலைவர் பி.இளம்பரிதி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.குப்புசாமி,கே.எல்லப் பன், கே.பூபதி உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.