districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

எல்ஆர்ஜி மகளிர் கல்லூரி கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

திருப்பூர், மே 27 – 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டு திருப் பூர் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு பட்டப் படிப்பிற்கு மாண வியர் சேர்க்கை கலந்தாய்வு தேதி விப ரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து இளநிலை பாடப்பிரிவுகளுக்கு முன்னாள் ராணு வத்தினர், மாற்றுத்திறனாளி, விளை யாட்டு வீரர், தேசிய மாணவர் படை உள் ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டில் இடம் பெறு வோருக்கு மே 30 ஆம் தேதி கலந் தாய்வு நடைபெறும். இளநிலை அறிவி யல் பாடப்பிரிவுகளான கணிதம், பௌதீ கம், வேதியல், விலங்கியல், தாவரவி யல், உணவு அறிவியல் மற்றும் ஊட்டச் சத்து, மைக்ரோ பயாலஜி, கணினி அறி வியல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பிரிவுக ளுக்கு ஜூன் 1 மற்றும் 2 தேதிகளிலும்,  வணிகவியல், வணிகவியல் கணினி பயன்பாடு, வணிக நிர்வாகவியல், வர லாறு, பொருளியல் பாடப்பிரிவுக ளுக்கு ஜூன் 3 மற்றும் 5 ஆம் தேதிக ளிலும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய  பாடப்பிரிவுகளுக்கு ஜூன் 6ஆம் தேதி யும் கலந்தாய்வு நடைபெறும் என்று  மாவட்ட நிர்வாக செய்திக்குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகள் மோதல்: 20 பேர் படுகாயம்

திருப்பூர், மே 27 - திருப்பூர் மாவட்டம், காங் கேயம், அழபிச்சா கவுண்டன்பு தூர் அருகே சனியன்று காலை  பல்லடம் நோக்கி சென்ற அரசு  நகர பேருந்து பயணிகளை இறக்கி கொண்டிருந்தது. அப் போது பின்னால் கோவை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென, நகர பேருந்து மீது மோதியது. இதில் நகர பேருந்தின் பின் பகுதி மற்றும் கோவை அரசு  பேருந்தின் முன்பகுதி பெரும் சேதமடைந்தன. இந்த விபத்தில் 20க்கும்  மேற்பட்ட பயணிகள் படுகா யமடைந்தனர். இதில் 5 பேர்  பெண்கள் ஆவர். இச்சம்பவம் குறித்து காங்கேயம் போலீ சார் விசாரணை நடத்தி வரு கிறார்கள். இந்த விபத்தில் நல் வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏற் படவில்லை.

ஐடிஐயில் மாணவர் சேர்க்கை

ஈரோடு, மே 27- அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகளில் முதலா மாண்டு முழுநேர பட்டயப் படிப்பில் சேர மாணவர்களி டமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.  இதுகுறித்து இக்கல்லூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, ஈரோடு மற்றும் கோபி செட்டிபாளையத்தில் பொறியியல் பிரிவில் எலக்ட்ரீசியன், பிட்டர், மெசினிஸ்ட், டர்னர், ஒயர்மேன், வெல்டர், டெக்ஸ் டைல்ஸ், மெக்கானிக் மோட்டர் வெகிக்கிள், ஏசி மெக்கானிக்  ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. பொறியியல் அல்லாத கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் கட்டடபட வரைவாளர் பாடப்பிரிவுகளிலும் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும்  இன்ட்டஸ்ட்ரி 4.0 திட்டத்தின் கீழ் அதிநவீன தொழில் நுட்பத்துடன் புதிதாக பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன.  இதில், சேர்ந்து பயிற்சி பெற 8 ஆம் வகுப்பு தேர்ச்சி,  10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ தவறியவர்கள் காசிபாளையம் மற்றும் கோபிசெட்டி பாளையத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை நேரில் அணுகலாம். பயிற்சி கட்டணம் முற்றிலும் இல வசம். பயிற்சி பெறுபவர்களுக்கு தரமான பயிற்சி வழங்கப் படுவதுடன் மாத உதவித்தொகை ரூ.750, விலை யில்லா லேப்டாப், சைக்கிள், சீருடை, பாட புத்தகங்கள், காலணி மற்றும் பஸ் பாஸ் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். மேலும் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு  வரை அரசு பள்ளியில் படித்த பெண் பயிற்சியாளர்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ரூ.1000 மாதந்தோறும் வழங்கப்படும். 8ஆம் வகுப்புடன் இரண்டாண்டு ஐடிஐ பயிற்சி மற்றும் 10ஆம் வகுப்புடன் இரண்டாண்டு ஐடிஐ  பயிற்சி முடித்தவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம்  முறையே 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும்.  பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு ஒன்றிய, மாநில  அரசு மற்றும் பிரபல தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். மேலும், விபரங்களுக்கு முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம்,ஈரோடு 0424-2275244 மற்றும் உதவி இயக்கு நர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், ஈரோடு 0424-2270044 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். ஒவ் வொரு துறையிலும் 60 மாணவர்கள் வீதம் சேர்க்கப்பட உள்ளனர். ஜுன் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

கோவை, மே 27- கோவையில் மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி உயிரிழந்தார். இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சுபாஷ் யாதவ் (27).  இவர் கோவையில் தனது சகோதரருடன் தங்கி சரவணம் பட்டி - கீரணத்தம் சாலையில் உள்ள தண்ணீர் நிறுவனத்தில்  பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வியாழனன்று இரவு  சுபாஷ் யாதவ், நிறுவனத்தில் வேலை செய்து கொண்டி ருந்தார். அப்போது அவர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம்  தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயம டைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரி சோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே  இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இது தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணிமுத்தாறில் பொங்கி வழியும் நுரை நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம்

சேலம், மே 27- சேலம் திருமணிமுத்தாறில் பொங்கி வழியும் நுரையால், நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.  சேலம் மாவட்டத்தில் சமீப காலமாக கன  மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திரு மணிமுத்தாறில் வெள்ளப் பெருக்கு ஏற் பட்டது. இதனிடையே திருமணிமுத்தாறு ஆக்கிரமிப்புகளால் ஏற்கனவே கழிவு நீர் கால்வாயாக மாறி வருகிறது. இந்நிலையில், சாயக் கழிவுகளும் கலப்ப தால் சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக் கப்படுகிறது. குறிப்பாக, மழைக் காலங்களில்  ஏற்படும் வெள்ளத்தின் போது சாயப்பட்ட றைகளில் சுத்திகரிப்பு செய்யப்படாமல் தேக்கி வைக்கப்படும் ரசாயன கழிவு நீர்திருமணிமுத்தாற்றில் அப்படியே திறந்து விடப்படிகிறது. இதன் காரணமாக திருமணி முத்தாற்றில் ஆங்காங்கே வெள்ளை நிற  மலை போல் நுரை பொங்கி சுற்றுச்சூழலுக்கு  கேடு விளைவித்து வருகிறது. இதனால் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெள்ளியன்று சேலத்தில்  பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, திருமணிமுத்தாற்றில் மழைநீர் அதிகளவில் சென்று கொண்டி ருந்தது. இதனை பயன்படுத்தி சாயப்பட்ட றைகளில் தேக்கி வைக்கப்பட்ட சுத்திகரிக் கப்படாத நீரை வெளியேற்றி வருகின்றனர். இதன் காரணமாக கொண்டலாம்பட்டி, பூலா வரி, அரியானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் திருமணிமுத்தாற்றில் நுரை பொங்கி மலைபோல் குவிந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன்  பல்வேறு நோய்த்தொற்றுக்கும் பொது மக்கள் ஆளாகி வருகின்றனர். எனவே, அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சாய ஆலைகளை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விதிகளை மீறி சாலை அமைத்த  2 அலுவலர்கள் பணியிடை நீக்கம்

உதகை, மே 27- தனியார் காபி, குருமிளகு எஸ்டேட் பகுதி யில் விதிகளை மீறி சாலை அமைத்த விவ காரத்தில், பர்லியார் கிராம நிர்வாக அலுவலர்  சிவக்குமார் மற்றும் அவரது உதவியாளர் சுரேஷ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் உத்தரவிட்டார்.  நீலகிரி மாவட்டம், குன்னூர் - மேட்டுப் பாளையம் சாலையில், குரும்பாடி பகுதி யில் விதிகளை மீறி தனியார் காபி, குருமிளகு  தோட்டம் அமைக்க, சாலையை ஏற்படுத்தி  வந்த தனியார் நிறுவனம் அங்கிருந்த மரங் களை வெட்டி அகற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படை யில், வட்டாட்சியர் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதன் அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்ப டைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஜேசிபி இயந்திரத்தை தவறாக பயன் படுத்தி, விதிகளை மீறி தனியார் நிறுவனம் சாலை அமைத்த போது கவனக்குறைவாக இருந்ததாக கூறி பர்லியார் கிராம நிர்வாக  அலுவலர் சிவக்குமார் மற்றும் அவரது உதவி யாளர் சுரேஷ் ஆகியோரை பணியிடை நீக்கம்  செய்து மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித்  உத்தரவிட்டார்.

சிஐடியு பொதுக்கூட்டத்திற்கு  வரும் தோழர்கள் கவனத்திற்கு

திருச்சிராப்பள்ளி, மே 27- சிஐடியு சார்பில் திருச்சியில் நடைபெறும் பிரச்சார  நடைபயணம், பேரணி, பொதுக்கூட்டத்திற்கு வருபவர்  களுக்கான பேருந்து வழித்தடங்கள் குறித்து அறிவிக்கப்  பட்டுள்ளது. இதுதொடர்பாக சிஐடியு மாநிலச் செயலாளர் ஜி.சுகு மாறன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘‘தமிழ்நாட்டின் 7 முனைகளிலிருந்து வரும் நடைபயண பிரச்சார நிறைவு, பேரணி பொதுக்கூட்டம், ஊர்வலம் திருச்சி உழ வர்சந்தையில் மே 30 அன்று மாலை 4 மணிக்கு துவங்கி  பட்டாபிராமன்பிள்ளை தெரு, தென்னூர் ஹைரோடு வழி யாக புத்தூர் நால்ரோடு பொதுக்கூட்ட திடலை அடையும். மத்திய பேருந்து நிலையம், ரயில்நிலையம் வழியாக  வருபவர்கள் தில்லைநகர், உறையூர் வழியாக செல்லும் நகர பேருந்தில் மதுரம் மருத்துவமனை நிறுத்  தத்தில் இறங்கி நடந்து வரலாம். வாகனத்தில் வரு பவர்கள் நீதிமன்ற எம்ஜிஆர் சிலை வழியாக உழ வர்சந்தை வரலாம். சத்திரம் பேருந்து நிலையம் வழியாக பேருந்தில் வரு பவர்கள் தில்லைநகர், உறையூர் வழியாக செல்லும் பேருந்தில் ஏறி  மதுரம் மருத்துவமனை நிறுத்தத்தில் இறங்கி உழவர்சந்தை வரலாம். வாகனத்தில் வருபவர்கள் தில்லை நகர் கே.எம்.சி  வழியாக உள்புறம் வந்தால் உழவர்சந்தை வரலாம்.  மேலும் விபரங்களுக்கு 9443191437, 960088,1977, 99526 39349 என்ற எண்களின் தொடர்பு கொள்ளலாம்’’ என  தெரிவித்துள்ளார்.

மூளைச்சாவு அடைந்தவரின்  உடல் உறுப்புகள் தானம்

கோவை, மே 27- கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிக்காரம் பாளை யத்தை சேர்ந்த பிரபு (40) கடந்த 24 ஆம் தேதி  இருசக்கர வாக னத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி தலையில் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து, மேல்  சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இந்நிலையில், அவருக்கு மூளை சாவு அடைந்ததை மருத்துவர்கள் உறுதி  செய்தனர். இதனைத்தொடர்ந்து, பிரபுவின் உடல் உறுப்புக ளை தானமாக வழங்க அவரது உறவினர்கள் மற்றும் பெற் றோர்கள் முன் வந்தனர். பிரபுவின் கல்லீரல் மற்றும் இரண்டு  சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டன. இதன் மூலம் மூன்று பேர் மறுவாழ்வு பெற்றனர். இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறுகையில், தானம் செய்தவரின் உடல் உறுப்புகள் தமிழ்நாடு உறுப்பு  மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி,  ஒரு  சிறுநீரகம்  கோவை அரசு மருத்துவமனை உள்நோயாளிக்கும், மற் றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனை உள் நோயா ளிக்கும், கல்லீரல் கோவையில் தனியார் மருத்துவமனை நோயாளிக்கும் தானமாக வழங்கப்பட்டது. உடல் உறுப்பு களை தானமாக வழங்கியவரின் குடும்பத்தினருக்கு மருத்துவமனை முதல்வர் நன்றி தெரிவித்தார். 

ஏற்காட்டில் வளர்ப்பு விலங்குகள் கண்காட்சி

சேலம், மே 27- ஏற்காட்டில் கோடை விழாவை முன்னிட்டு, வளர்ப்பு விலங்குகள் கண்காட்சி சனியன்று நடைபெற்றது.  சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 46ஆவது கோடைவிழா நடைபெறுகிறது. இதில், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க  பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடை பெற்று வருகிறது. கோடை விழா 7ஆம் நாளான சனியன்று  கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாய் மற்றும் வீட்டு வளர்ப்பு விலங்குகள் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் ஜெர்மன் செப்பர்ட், டாபர்மென், லேபர்ட், பொம்மேரியன்,  கிரேடன். பாக்ஸர், டால்மேஸன் டெரியர் அஸ்கி மற்றும் நாட்டு இன நாய்கள், கால்நடை  பராமரிப்பு துறை சார்பில் பொங்கலூர் காளைகள், அசாம் குட்டை வகை ஆடுகள், டோனி குட்டை குதிரை, கரந்தை ஆடுகள், பெர்சியன் பூனை வகைகள், அரிய வகை சேவல் கள், புறாக்கள், முயல், பறவைகள் ஆகிய சுற்றுலா பயணி களின் பார்வைக்காக  வைக்கப்பட்டிருந்தன.  இக்கண்காட்சியில், போலீஸ் வளர்ப்பு நாய்களை கொண்டு, வெடிமருந்து கண்டுபிடிப்பது, குற்றவாளிகளை கண்டறிவது உள்ளிட்ட நாய்களின் தனித்திறமையை வெளிக் காட்ட வைத்தனர்.  இக்கண்காட்சியியை சுற்றுலா பயணிகள் பெரிதும் கவர்ந்தன. வளர்ப்பவரின் சொல்லுக்கு கீழ்படியும் செல்ல பிராணிகளுக்கு முதல் மூன்று இடங்களை பிடித்த வளர்ப்பு  நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

ரயிலின் பயண நேரம் மாற்றம்

கோவை, மே 27- கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் மாற்றம் செய்யப் பட்டுள்ளதாக, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.  அதன்படி வரும், 28ஆம் தேதி முதல்  கோவை- நாகர்கோவில் (22668) ரயிலானது விருதுநகர் ரயில்வே ஸ்டேசனுக்கு மதியம் 1:05 மணிக்கும், கோவில்பட்டிக்கு 1:40க்கும், வாஞ்சி மணியாச்சிக்கு 2:18க்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மென்பொருள் நிறுவன ஊழியர் தற்கொலை

கோவை, மே 27- கோவையில் மென்பொருள் நிறுவன ஊழியர் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். கோவை, சங்கனூர் சாஸ்திரி நகரை சேர்ந்த மென் பொருள் நிறுவன ஊழியர் பிரசாத் (31). இவரது மனைவி கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோயில் திருவிழாவுக்காக பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டில் பிரசாத் மட்டும்  தனியாக வசித்து வந்தார். தினந்தோறும் அருகில் உள்ள தனது  பெற்றோர் வீட்டுக்கு சென்று சாப்பிட்டு வந்தார். இந் நிலையில், வெள்ளியன்று வீட்டில் இருந்த பிரசாத் திடீரென  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இத்தகவலறிந்து சம்பவயிடத்திற்கு சென்ற போலீசார், பிரசாத் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு கோவை அரசு  மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பிரசாத் குடும்ப பிரச்சனையில் தற்கொலை செய்து கொண் டாரா? அல்லது வேறு காரணமா? என ரத்தினபுரி போலீசார்  வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளச்சாராய ஊறல் பேரல் அழிப்பு

சேலம், மே 27- பெரிய கல்வராயன் மலைப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த கள்ளச்சாராய ஊறல்  பேரலை போலீசார் அழித்தனர். தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து சிலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற் படுத்யது. இதனையடுத்து, கள்ளச்சாரயம் புழக்கத்தை தடுக்க போலீசார் தீவிர தேடுதல்  நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதன் ஒருபகுதியாக பெரிய கல்வராயன் பாளையம் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 800 லிட்டர் கள்ளச்சாராயம் ஊறலை கண்ட றிந்து அழித்தனர். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம் வட்டம் முடவன் கோவில் வனப் பகுதியில்  கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக  கருமந்துறை தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, வாழப்பாடி காவல்துணை கண்காணிப் பாளர் ஹரிச்சங்கரி தலைமையில், தனி படை  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, மலைப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு நான்கு பேரல்களில் சுமார்  800 லிட்டர் ஊறல்  மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது தெரிய  வந்தது. இதனையடுத்து, மண்ணில் புதைக்கப் பட்டிருந்த நான்கு பேரல்களையும் தோண்டி  எடுத்து அதிலிருந்து சாராயம் காய்ச்சுவதற் கான ஊரலை  கீழே கொட்டி அளித்தனர். மேலும், இந்நடவடிக்கையில் ஈடுபட்ட சமூக  விரோதிகள் யார் என போலீசார் தேடி வரு கின்றனர்.

ரேசன் அரிசி பறிமுதல்

 கோவை, மே 27- பொள்ளாச்சி குடிமைப் பொருள்  வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் சனி யன்று காலை 5 மணியளவில்  பாலக்காடு சாலை கோவை  சுகுணாபுரம் அருகே வாகன  சோதனை செய்து கொண்டி ருந்த பொழுது,  அவ்வழி யாக வந்த வாகனத்தை அதி காரிகள் சோதனை செய் தனர். அதில், பொது விநியோ கத் திட்டத்தின் கீழ் வழங்கப் பட்டு வரும் 25 கிலோ எடை கொண்ட 20 வெள்ளை நிற மூட்டைகள் என மொத்தம் 500 கிலோ ரேசன் அரிசி  கடத்தப்படுவது தெரிய வந்தது. இதனையடுத்து அரிசி கடத்திய அன்பு நகரை சேர்ந்த அபிப் ரகுமான் என்பவரை கைது செய்து விசாரணை செய்தனர். இதில், இவர் உக்கடம் சுற்றுவட்டார பகுதி  பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவில், அதிக விலைக்கு விறப்பது தெரியவந்தது.